பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
9

யைக்கொடுக்கும். அது குழந்தைகள் சிறிய மின்சாரப்பெட்டியைத்தொட்டால் எவ்விதம் சந்தோஷ உணர்ச்சி உண்டாகுமோ அவ்விதமாகயிருக்கும்.

அநேகமாய் எல்லா திருக்கை மீன்களுக்கும் நீண்டவால் இருக்கும். அவ்வால்களில் அனேகம் நீளத்திலும் மெலிந்திருப்பதிலும் சவுக்கைப்போலிருக்கும். இவைகளை மீன் பிடிக்கிறவர்கள் வினோத வஸ்துக்களாக விற்பதுண்டு. இந்த சவுக்குப் போன்ற வால்களில் பலவற்றிற்கு ஒரு அடி அல்லது அதிகமான நீளமுள்ள ஒன்று அல்லது இரண்டு எலும்பு முட்களிருக்கும். அவைகளின் இருபக்க ஓரத்திலும் பின்பக்கமாய் வளைந்திருக்கும் கோறமான பற்கள் செறிந்திருக்கும். இந்த பயங்கரமான ஆயுதத்தால உண்டாக்கப்படும் காயம் பொல்லாததென்று உலகத்திலுள்ள எல்லா மீன் பிடிப்பவர்களும் பயப்படுகிறார்கள். அந்தக்காயம் அதிக ஆழமாகவும் கடுமையாகவும் இருப்பது மன்னியில், அதிகப்புண்ணாகி மெதுவாக ஆறுகிறது. சிலவகை திருக்கைகளில் அம்முள்ளின் அடிப்பாகத்தில் உள்ள ஒரு கோளத்திலே விஷம் உண்டாக்கப்பட்டு மற்ற பிராணிகளை காயப்படுத்தும்போது அம்முள்ளின் வழியாய் செலுத்தப்படுகின்றது.

விலாங்கு மீன் வகைறா ஒன்று இக்குளத்தில் இருக்கிறது. அது ஐரோப்பாவில் சாதாரணமாய்க் காணப்படும் விலாங்கு மீன்களுக்கு அதிக சம்பந்தமுள்ளதாயும் அவற்றின் குணங்களையுடைய தாயும் இருக்கிறது. அதின் உருவம் பாம்பைப்போலிருக்கிறது. ஆனால் பாம்பிற்கும் அதற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், அதின் முதுகில் பெரும்பாகத்திலும் வாலின் கீழ்பாகத்திலும் இரக்கை போன்ற ஒரு சிகை வளர்ந்துள்ளது. இரண்டு சிறு இறகைப் போன்ற சிதள்கள் மூச்சுவிடும் இடத்திற்குக்கீழே உள்ளன. விலாங்கு மீனின் ஜீவசரித்திரம் நமக்குத்தெரிந்த மீன்களின் சரித்திரத் தை யெல்லாம் விட மிக ஆச்சர்யமாயிருக்கும். விலாங்குக்குட்டிகள் கரையிலிருந்து வெகுதூரம் ஆழமான சமுத்திரத்தில் பொரிக்கப்படுகின்றன. இக்குட்டிகள் முட்டையினின்று வெளிவந்த உடன் பெரிய மீன்களைப்போலல்லாமல் கண்ணாடியாற் செய்தாப்போலிருக்கும். அவைகள் பெரிதாக வளர கரைநோக்கி வருகின்றன. கடைசியாய் அவைகளில் அநேகம் கும்பலாய் ஒரு நதியின் முகத்துவாரத்தில் வந்து சேருகின்றன. அதற்குள் அவைகளின் உருவம் பெரிய மீன்களைப்போல் ஆகின்றன. அப்பொழுது ஒரு நாடாவைப்போன்ற மீனாகயிருக்கும். இக்குட்டி விலாங்கை ஆங்கிலத்தில் எல்வர் (Elver) என்று சொல்லுகிறார்கள். சில நதிகளின் முகத்துவா ரங்களில் இக்குட்டி விலாங்குகள் அனேகமாய்கூடிக்கொண்டு ஆற்று ஓட்டத்தில் எதிர்த்து நீந்தி போவதற்கு வழிபார்த்துக்கொண்டிருக்கும். அவைகள் கடலில் பிறந்தபோதிலும் இப்பொழுது உள் நாட்டு நீர்க்கால்களில் வசிப்பதற்கு இடந்தேடுகின்றன. கடைசியாகக் கடலிலிருந்து அநேக மைல் தூரங்களுக்கப்பால் சிறுநதிகளிலும் குளங்களிலும் அவைகள் காணப்படும். வர வர உருவத்தில் பருத்து சாதாரணமாய் யாவற்கும் தெரிந்த பாம்பு போன்ற பழுப்பு நிறமான விலாங்காக மாறிவரும், இன்னிலமை