பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் உருஎ. சுட்டுமுத லிறுதி வியல்பா கும்மே. இஃது, இல்லீற்றுட் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கி இயல்பு கூறுதல் இதலிற்று, இ-ன் :-- சுட்டு முதல் இறுதி இயல்பாகும்-சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகர வீற்றுப்பெயர் மேற்கூறிய வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும். உ-ம். அதுகுறிது, இதுகுறிது, உதுகுறிது; சிறிது, தீது, பெரிது எனவரும்.(குரு) உடு.வு. அன்றுவரு காலை யாவா குதலும் ஐவரு காலை மெய்வரைந்து கெடுதலும் செய்யுண் மருங்கி னூரித்தென மொழிப. இஃது, இவ்வீற்றுச் சுட்டுமுதத்பெயர்க்கு ஓர் செய்யுள் முடிபு உறுதல் நுதலிற்று. இ-ன் -- அன்று வருகாலை ஆ ஆகுதலும் - அதிசாரத்தான் நின்ற சுட்டு முதல்உகர வீற்றுப்பெயர் அன்று என்னும் சொல் வருமொழியாய் வருக்காவத்து அவ்வுகரம் ஆகார மாகித் திரித்து முடிதலும், ஐ வருகாலை மெய் வரைந்து கெடுதலும் ஐ என்னும் சாரியை இடைவந்து முடியுங்காலத்து அவ்வுகாம் தான் ஊர்த்த மெய்யை ஒழித்துக் கெட்டுமுடிதலும், செய்யுள் மருங்கின் உரித்து என மொழிப-அவ்விருமுடிபும் செய் யுட்கண் உரித்தென்று சொல்லுவர். உ - ம். அதாஅன் றம்ம, இதா அன்றம்ம, உதா அன் தம்ம எனவும்; அதை மற்றம்ம, இதைமற்றம்ம, உதைமற்றம்ம எனவும் வரும். உடுக. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே, இஃது, இல்வீற்றுப்பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுதல் நுதலிற்று, இ-ள்:- வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று - உகரவீற்றுப்பெயர் வேற் றுமைப்பொருட்புணர்ச்சிக்கண்ணும் அல்கெரவீற்ற அல்வழியோடு ஒருதன்மைத்தாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும், உ-ம். கடுக்காய்; செதிள், தோல், பூ என வரும். உசுய. எருவுஞ் செருவு மம்மொடு சிவணித் திரிபிட னுடைய தெரியும் காலை அம்மின் மகரஞ் செருவயிற் கெடுமே தம்மொற்று மிகூஉம் வல்லெழுத் தியற்கை. இஃது, இவ்வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை விதியும் ஒன் நற்கு வல்லெழுத்தினொடு சாரியை விதியும் கூறுதல் நதலிற்று. இ-ள்:- எருவும் செருவும் அம்மொடு சிவணி திரிபு இடன் உடைய தெரியும் காலை - எரு என்னும் சொல்லும் செரு என்னும் சொல்லும் அம்முச்சாரியையொடு பொருத்தி முன் சொன்ன வேற்றுமைப் பொதுவிதியின் வேறுபட்டு முடியும் இடனு டைய ஆராயுக்காலத்து; அம்மின் மசரம் செருவயின் கெடும் - அவ்வம்முச்சாரியையது ஈற்றின் மகரம் செரு என்னும் சொல்லிடத்துக் கெட்டு முடியும்; வல்லெழுத்து இயற்கை தம் ஒற்று மிகம் - அவ்வாறு கெட்டவிடத்துச் செரு என்பது வல்லெழுத்தாகிய இயல்பையுடைய தமது ஒற்று மிக்கு முடியும்,