பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இன்னும் "எல்லாம்” என்னும் இலசினானே, இவ்வீற்றுக்கண் மென்கணத்து மகரம் ஒழிந்தன வச்தவழி மகரம் அல்லொற்றாய்த் திரிதலும் கொள்க, எல்லாருஞ் ஞான்றார்; நீண்டார் எனவும்: எல்லீருஞ்ஞான் றீர்; நீண்டீர் எனவும்; தாஞ்ஞான்றார்; நீண்டார் எனவும்: நாஞ்ஞான்றாம்; நீண்டாம் எனவும்: யாஞ்ஞான் றேம்; நீண்டேம் எனவும் கொள்க, அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா மெனும்பெய ருருபிய னிலையும் வேற்றுமை பல்வழிச் சாரியை நிலையாது. இஃது, அவ்வீற்று விரவப்பொருள் ஒன்றற்கு அல்வழிக்கண்ணும் வேற் றுமைக்கண்ணும் உருபியலொடு மாட்டெறிந்து முடிபுகூறுதல் நதலிற்று, இ - ள்:- அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும் - அல்வழியைச் சொல்லு மிடத்தும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சியிடத்தும், எல்லாம் எனும் பெயர் உருபு இயல் நிலையும் எல்லாம் என்னும் விரவுப்பெயர் உருபுபுணர்ச்சியின் இயல்பிலே நின்று வற்றுச்சாரியையும் இறுதி உம்முச்சாரியையும் பெற்று முடியும், வேற்றுமை அல்வழி சாரியை நிலையாது அப்பெயர் வேற்றுமையல்லாத இடத்து சாரியைபெறுதல் நிலையா தாயே முடியும். மாட்டேறு ஏலாத அல்வழிவினையும் உருபியலோடு மாட்டெறிந்துவிலக்கிய மிகு தியான், அல்வழிச்சண் வன்கணத்திறுதி உம்முப்பேறும் நிலைமொழி மகரக்கேடும் வருமொழி வல்லெழுத்துப்பேறும், மென்கணத்து மகரக்கேடும் பண்புத்தொகைக்கண் மகரக்கேட்போடு இறுதி உம்மூப்பேறும் கொள்க, ' உ - ம். எல்லாச்குறியவும்;- சிறியவும், தீயவம், பெரியவும் எனவும்: எல்லாவற்றுக் கோடும்; செவியும், தலையும், புறமும் எனவும்; எல்லாஞான் றன ;- நீண்டன, மாண்டன எனவும்: எல்லாஞா னும்; நூலும், மணியும், யாப்பும், வலிமையும், அடையும், ஆட்ட மூம் எனவும்: எல்லாவற்றுஞானும் ;- ஆரலும், மணியும், பாப்பம், வலிமையும், அடைவும், ஆட்டமும் எனவும் கரும், எல்லாக் குறியரும்; சிறியரும், தீயரும், பெரியரும் என உயர்திணைக்கண்னும் ஒட்டுக. ஈண்டுச் சாரியை பெற்றவழி, மகரக்கேடு வற்றின்மிசை ஒற்றாய்க் கெட்டது. இது விரவுப்பெயராகலின், ஈற்றுப் பொதுமுடிவிற்கு எலாதென்று சாரியை வல்லெழுத்துக் சொன்னப்பட்டது. மெல்லெழுத்து மிகினு மான மில்லை. இது, மேற்கூறிய எல்லாம் என்பதற்கு அல்வழிக்கண் எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுதல் முதலிற்று, இ - ள்.- மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை-அல்கெல்லாமென்பது அல் வழிக்கண் மேல் இலேசினாற் கூறிய வல்லெழுத்தேயன்றி மெல்லெழுத்து மிக்கு முடியி லும் குற்றம் இல்லை, மேற்கூறிய செய்வ.சமேலே இது கூறினமையின், மகாக்கேடும் இறுதி உம்முப் பேறுக் செய் .