பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் 3 புள்ளிமயங்கியல். சாக இஃது, இவ் ஈற்றுள் ஒன்றற்கு வேற்றுமைக்கன் வேறு முடிபு கூறுதல் நூத லிற்று. இன்-கீழ் என் கிளவி உறழ தோன்றும் - கீழ் என்னும் சொல் உறழ்ச்சியாகத் தோன்றி முடியும். உ-ம். கீழ் குளம், கீழ்க்குளம் எனவரும். தோன்றும்' என்றானான், கொடுமுதல் குறுகாது உகரம் வருதலும் கொள்க, (ஆங்கு இயைபு வல்லெழுத்து இவ்வோத்தின் புறனடையான் வீழ்க்க, உ-ம், கீழுதனம்; சேரி, தோட்டம், பாடி எனவரும், நகூஎ, ளகா விறுதி ணகா வியற்றே. இது, எகார ஈற்றிற்கு ணகார ஈற்று வேற்றுமைமுடிபோடு இயைய வேற் றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ன் :--- வகார இறுதி ணகார இயற்று-எகார ஈற்றுப் பெயர் (வேற்றுமைக்கண்) ணகார ஈற்று இயல்பிற்றாய் (வன்கணம் வந்தால் ளகாரம் டகாரமாய்த் திரிந்து ) முடியும். உ-ம். முட் குறை; சிறை, தலை, புறம் எனவரும். (ஏகாரம்' ஈற்றசை,] {rs) ந.கூஅ, மெல்லெழுத் தியையின் ணகாரமாகும். இது, மேலதற்கு மென்கணத்து முடிபு கூறுகின்றது. இ-ன் :- மெல்லெழுத்து இயையின் ணகாரம் ஆகும்-(வகார ஈறு) மெல்லெழு த்து (வருமொழியாய் வந்து) இயையின் ணகாரமாய் (த் திரிந்து) முடி யும், உ.ம். முண் ஞெரி; துரி, முறி எனவரும், இதனை வேற்றுமை இறுதிக் கன் அல்வழியது எடுத்துக் கோடற்கண் சிங்க நோக்காக வைத்தலின், அல்வழிக் கும் இம்முடிபு கொள்க. உ-ம், முண் ஞெரிந்தது; நீண்டது, மாண்டது என வரும். கூகூகூ, அல்வழி யெல்லா முறழென மொழிப. இது, மேலதற்கு அல்வழி முடிபு கூறுதல் துதலிற்று, இ-ன்:-- அல்வழி எல்லாம் உறழ் என மொழிப- (or கார ஈற்று) அல்வழிகளெல் லாம் (திரிந்தும் திரியாதும்) உறழ்ந்து முடியும் என்று சொல்லுவர் (புலவர்). 'எல்லாம்' என்றதனால், குண வேற்றுமைக்கண்ணும் இவ் வுறழ்ச்சி கொள்க. உ-ம். முன் குறுமை, முட் குறுமை; சிறுமை, தீமை, பெருமை எனவும்: கோள் கடுமை, கோட் இமை எனவும் வரும். இன்னும் அதனானே, உருபு வாராது உரூபின் பொருள்பட வந்தவற்றின் முடி பும் கொள்க, உ-ம். அதோட் கொண்டான், இதோட் கொண்டான், 2.தேசட் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எனவரும்,