பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - நான்மாபு உக, றலள வென்னும் புள்ளி முன்னர்க் கசப வென்னு மூவெழுத் துரிய, இது, மெய்மயக்கம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :-ட ற ல ள என்னும் புள்ளி முன்னர்-ட றலள என்று சொல்லப் படும் புள்ளிகளின் முன்னர், க ச ப என்னும் மூ எழுத்து உரிய-க ச ப என்று சொல்லப்படும் மூன்றெழுத்தும் மயங்குதற்கு உரிய, உ-ம், கட்க, கற்க, செல்க, கொள்க எனவும், கட்சிறார், கற்சிறார், செல்சிறார், கொள் சிறார் எனவும், கட்ப, கற்ப, செல்ப, கொள்ப எனவும் வரும். மேல் தெரியுங்காலை' என்றதனான், இம்மெய்மயக்கம் கூறுகின்ற சூத்திர மெல்லாம் பலபடியால் மயக்கம் கொள்ளச் சொல்நோக்கு உடைய வெனினும், வழ க்கினோடு பொருந்த ஒன்றறோடு ஒன் நன்றி மயங்காதென்பது கொள்க. மெய் மயக்கம் ஒருமொழிக்கும் புணர்மொழிக்கும் பொதுவாகலின், மேற் கூறும் புணர் மொழிச் செய்கையெல்லாம் தலையாய அறிவினோரை நோக்க ஒருவாற்றாற் கூறி யவா முயிற்று. உச. அவற்றுள் லௗஃகான் முன்னர் பவவுர் தோன்றும். இதுவும் அது. இ-ள் :--அவற்றுள்-மேற்கூறிய நான்கனுள்ளும், வனஃகான் முன்னர்-லகார வகாரங்களின் முன்னர், யவலம் தோன்றும்-கசபக்களேயன்றி யகர சங்களும் தோன்றி மயங்கும். உ-ம், கொல்யானை, வெள்யானை, கோல்வளை, வெள்வளை என வரும். (உச) உரு, கஞணா மனவெனும் புள்ளி முன்னர்த் தத்த மிசைக ளொத்தன நிலையே, இதுவும் அது. இ-ள் :- ஞ ண ந மன என்னும் புள்ளி முன்னர்- ங ஞ ண ந மன என்று சொல்லப்படும் புள்ளிகளின் முன்னர், தம்தம் மீசைகள் ஒத்தன-(நெடுங்கணக்கி னுள்) தத்தமக்கு மேல்நிற்கும் எழுத்தாகிய கசடதபறக்கள் பொருந்தின, நிலை-மயங்கிரிற்றற்கண். (ஏகாரம் ஈற்றசை.) உ-ம், தெங்கு, மஞ்சு, வண்டு, பந்து, கம்பு, கன்று என வரும், உசு. அவற்றுள் ணனஃகான் முன்னர்க்

  • சுசஞப மயவவ் வேழு முரிய, இதுவும் அது.

இ-ன் :- அவற்றுள் மேற்கூறப்பட்ட மெல்லெழுத்து ஆறனுள், ணனஃகான் முன்னர் - ணகார னகாரங்களின் முன்னர், க ச ஞ ப மயவ எழும் உரிய(டறக்கனே யன்றி,) க ச ரூப மயன் என்றுசொல்லப்படும் ஏழும் மயங்குதற்கு உரிய,