பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

         தொல்காப்பியம். 
          இளம்பூரணம்.
          
            பதிப்புரை. 
            
      தொல்காப்பியம்" என்னும் இந்நூல் தமிழ் மொழிக்குத் தலையாக விளங்கும் ஒப்புயர்வற்ற ஓர் இலக்கணம், இஃது அகத்தியனது பன்னிரு மாணாக்கருள் “திரணதூமாக்கினி” என்னும் இயற்பெயரினையும், பொருந்தக் கற்றுப் புரைதபவுணர்க்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப்பியன் என்னும் புகழ்ப்பெயரினையும் கொண்டு விளங்கிய ஓர் முனிவனால் இயற்றப்பெற்றது. இதற்கு முதல் நூல் அகத்தியனால் இயற்றப் பெற்ற அகத்தியம்” என்ப. இந்நூல் பன்னீராயிரம் வருஷங்களுக்குமுன் இயற்றப் பெற்றதென வீரசோழியத் தின் பதிப்புரையில் திருமன், சி. வை. தாமோதரம்பிள்ளை நிலைநாட்டியுள்ளனர்,
       ஆண், பெண், அலிகளை ஆண்பால், பெண்பால், ஒன்றன் பால் விகுதிகளால் உணர்த்துவது தமிழ்மொழி ஒன்றே. ஆண்டால் விததியைப் பொருந்தி ஆணைக்கு, பொமலும், பெண்பால் விகுதியைப் பொருந்திப் பெண்ணைக் குறியாமலும், ஒன்றன்பால் விகுதியைப் பொருந்தி அவியைக் குறியாமலும்கிற்கும் சொற்கள் ஆரியம் முதலிய மொழிகளில் எண்ணில் உண்டு, உமர் திணை, அஃறிணை என்னும் தமிழ் இலக்கணப்பாகுபாடு ஆரியம் முதலியவற்றில் இல்லை, நிலத்தின் பாகுபாடுகளையும், அவற்றின் உரிப்பொருள், கருப்பொருள்களையும், அவற்றின் மக்களாது ஒழுக்கங்களையும் கூறுவது தமிழ் இலக்கலாம் ஒன்றே.
         இவ்வகைத் தனிச் சிறப்புப் பொருந்திய இத்தமிழ் இலக்கணத்துள்ளும் ஆரிய மொழிகள் சிலவற்றையும், ஆரியர் பழக்க வழக்கங்கள் சிலவற்றையும், ஆரியர் கொள்கைகள் சிலவற்றையும், இந்தாவாசிரியன் நுழைத்திருத்தலை ஆங்கால்குக் காணலாம். ஆயினும், தமிழ் மக்களின் முற்காலப் பழக்க வழக்க ஒழுக்கம்களும், தமிழ் மொழியின் நேர்மையும் மாண்பும் எற்றமும் இந்நூலின்கண் தெற்றெனக் காணலாகும். இந்நூலின் பழுத்ததிகாரச் சொல்லதிகாரச் சூத்திக்காக் காேர் நன்லூவா திபவற்றைப் புனஅலா தியனலாகக் காண்பரென்பது திண்ணம்
         இந்ற்கு உரை எழுதினோர் இளம்பூரணர், கல்லாடர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் என்னும் ஜமால்கள் இளம்பூரணரும், பேராசிரியரும் இந்நூலின் எழுத்ததிகாரம் இல்லத்தனம், பொருவநிகாரம்