பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உதயியல் எட்ட உா.., புள்ளி யி றுதியு முயிரி று கிளவியும் சொல்லிய வல்ல வேனைய வெல்லாம் தேருங் காலை யுருபொடு சிவணிச் சாரியை நிலை யுங் கடப்பா டிலவே. இஃது, இவ்வோத்திற்கெல்லாம் புதாடை கூறுதல் நுதலிற்று. இ-ள் :- புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும் சொல்லிய அல்ல எனைய எல் லாம்-புள்ளிமீற்றுச்சொல்லும் உயிரீற்றுச்சொல்லுமென முடிபுசொல்லியவை - அல் லாத ஒழிந்தவையெல்லாம், தேரும் காலை-ஆராயும் காலத்து, உருபொடு சிவணி சாரி யை நிலையும் கடப்பாடு இல் உருபுகளொடு பொருத்தி இன் சாரியை நின்று முடியும் முறைமையை யுடையலுல்ல. (நின்றும் நில்லாதும் முடியும்.) புள்ளியீற்றுள் ஒழிந்தன ஐந்து; உயிரீற்றுள் ஒழிந்தது ஒன்று. இவையும் எம்1 த்தோதிய ஈற்றள் ஒழிந்தனவுமெல்லாம் ஈண்டுக் கொள்ளப்படும். உ-ம். மண்ணினை, மண்ணை, வேயினை, வேயை, நாரினை, சாரை, கல்லீனை, கல்லை, முள்ளினை, முள்ளை எனவும், ஒளியினை, கிளியை எனவும்; 1 பொன்னிளை, பொன்னை எனவும்; தாழினை, தாழை, தீபினை, தீயை, கழையினை, சழையை எனவும் ஒட்டுக. புள்ளியீற்றுள் ஒழிந்தன பலவாகலின், அது முற்கூறப்பட்டது. 'தேருக் காலை' என்றதனான், உருபுகள் நிலைமொழியாக நின்று தம்பொருளொடு புணரும் வழி முடி பும் முடிபுவேற்றுமையெல்லாம் கொள்க. மண்ணினைச்கொணர்ந் தான், கம்பியைக்கொணர்ந்தான், கொற்றனைக்கொண ர்ர்தான்; மலையொடு பொருத்து மால்யானை; மரத்தாற்புடைத்தான்; மரத்துக்குப் போனான்; காக்கையிற்கரிது: காக்கையதுபவி, மரத்துக்கண்கட்டினான் என ஒட்டுக, இன்று உருபியலாலான், உருபொடுசிவணி' என வேண்டாவன்றே. அதனான், உருபு புணர்ச்சிக்கண் சென்ற சாரியைகளெல்லாம் ஈற்றுப் பொதுமுடிபு உள் வழிப் பொருட்புணர்சசிக்கண்ணும் செல்லுமென்பது கொள்க. இன்னும் அதனானே, உயி சீறும் மெய்யீறும் சாரியை பொது இயல்பாய் முடிவனசொள். ரம்பியை, கொற் மனை எனவரும். {கய) ஆறுவது உருபியல் முற்றிற்று.