அது தொல்காப்பியம் - இளம்பூரணம் தலமரல் யானை புருமென முழங்கவும் பாலில் குழவி யலதவு மகளிர் பூவில் வறுந்தலை முடிப்பவு நீரில் வினையுனை நல்லி லினைகூடக் கேட்பவும் இன்னா தம்மவீண்டினி திருத்தல் துன்னருந் துப்பின் வயமான் றோன்றல் அறவை யாயி னினதெனத் திறத்தல் மறவை யாயிற் போரொடு திறத்தல் அறவையு மறவை மல்லை யாயின் திறவா தடைத்த திண்ணிலைக் கதவின் நீண்மதி லொருசிறை யொடுங்குதல் காணுத்தக வடைத்திது காணுங் காலே." (புறம் -சச) தொல் ஏயிற்று இவர்தலும்-தொல் எயிலின்கண் பரத்தலும். உதாரணம்:- "புல்லார் புகழொடு போக்கொழியப் பொங்கினனாய்ப் பல்லார் மருளப் படைபரப்பி - யொல்வார் நிறத்திறுத்த வாட்டானை நேரார் மதிலின் புறத்திறுத்தான் பூங்கழவி னான்." (வெண்பா - உழிஞை -ய] தோலது பெருக்கமும் தோற்படையினது பெருமையும். உதாரணம்:- "நின்ற புகழொழிய நில்லா வுயிரோம்பி இன்றுநாம் வைசு விழிவாகும் -- வென்றொளிரும் பாண்டினிரை தோற் பணியார் பகையரணம் வேண்டி லெளிதென்றான் 'மெந்து." [வெண்பா - உழிஞை - ககூ.] அகத்தோன் செல்வமும் - அகத்தரசனது செல்வமும். உதாரணம்:- "அளிதோ தானே பாரியது பறம்பே நளிகொண் முரசின் மூவிரு முற்றினும் உழவ ருழாதன நான்குபய னுடைத்தே ஒன்றே, செறியிலை வெதிரி னெல்விளை யும்மே இரண்டே, தீஞ்சுளைப் பல்வின் பழமூழ்க் கும்மே மூன்றே,கொழுங்கொடி வள்ளிக் கிழங்குலீழ்க் கும்மே நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே வான்கணற்றவன் மலையே வானத்து மீன்கணற்றதன் சுனையே யாங்கு மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும் புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினுந் தாளிற் கொள்ளலிர் வாளிற் றரலன் யான்றி குவெனது கொள்ளு மாறே
பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/85
Appearance