பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈடாச தொல்காப்பியம் - இளம்பூரணம் பபடாது. துணிதலான் மெய்ம்மையாகவென்றார். அதனைத் தலைமகன் வந்தவழிக் கூறுவா வாயிற் றனக்குப் புணர்ச்சியிற் காதலில்லையாம். சொல்லாளாயின் அவள் கூறியவதனாற் பயனில்லையாம். அதனைக் கலவியிறுதியினும் புலவியினும் கூறப்பெறும் என்றவாறு. "நின்னணங் குற்றவர் செய்த கொடுமைக ளென்னுட னெக் துவர் துரையாமை பெறுகற்பின்” (கலித் - எஎ) எனப் புலவியிற் கூறியவாறு காண்க. கலவியிறுதியிற் கூறுதல் வந்தவழிக் (காண்க.) {16.க) உாகஉ, பொழுது தலை வைத்த கையறு காலை பிறந்த போலக் கிளக்குங் கிளவி மடனே வருத்த மருட்கை. மிகுதியொ டவைகாற் பொருட்க ணிகழு மென்ப, .. என்-னின், இது பருவம் வந் தழித் தலைமகட் குரியதோர் வழுக்காத்தலை நுதலிற்று. பொழது தலைவைத்த லாவது - யாதானு மொரு பருவத்தைக் குறித்தவழியப் பருவம் இரு திங்களை யெல்லையாக வுடைத்தாயினும் அது தோற்றியவழி என்றவாறு. கையறு காலை என்பது - இது கண்டு செயலற்றகாலை என்றவாறு. இறந்தபோலக் கிளத்த லாவது --- அக்காலத் தோன்றிய பொழுது கழிந்தது போலக் கூறுதல். மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு அவை நாற்பொருட்கண் நிகழம் என்பு என்பது - அவ்வாறு கூறுதல் அறியாமையானாதல் வருத்தத்தானாதல் மயக்கத்தா னாதல் அக்காலத்திற் குரிய பொருள் மிகத்தோன்றுதலானாதல் என இந்நான்கு பொரு வானும் நிகழும் என் றவாறு. சிறுபொழுதாயின் யாமங் கழிவதன் முன்னர்க் கூறுதல். எனவே இவ்வாறு வருஞ் செய்யுள் காலம் பிழைத்துக் கூறுகின்றதல்ல வென்றவாறு. உதாரணம்:- பொருகடல் வண்ணன் புனைமார்பிற் மூர்போற் றிருவிலங் கூன்றிறற் றீம்பெய மூழ வருது மெனமொழிந்தார் வாரார்கொல் வானங் கருவிருந் தாலி நகும்.” (கார்நாற் - க) இது பருவங்கண்டவழி. வாரார்கொல் என் றமையால் இறந்தபோலக் கிளந்த காமுயிற்று. பிறவு மன்ன. இதுவு மோர் மாபுவழு வமைத்தல். (5) உாகூரி, இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி நிரம்பு நீக்கி நிறுத்த லன்றியும் வாய்மை கூறலும் பொய்தலைப் பெய்தலு நல்வகை யுடைய யேத்திற் கூறியும் பல்வகை யானும் படைக்கவும் பெறுமோ,