பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

௱௬௮

தொல்காப்பியம் - இளம்பூரணம்


௱௭.காமஞ் சொல்லா காட்ட மின்மையி
னேமுற விரண்டு முளவென மொழிப.

என்பது, மேலதற்கோர் புறனடையுணர்த்துதல் நுதலிற்று.

வேட்கையுரையாத கண் உலகத்தின்மையால் தவைவன் ஏமுதற்பொருட்டு நாணும் மடனும் உளவாம் என்றவாறு.

இதனாற் சொல்லியது மேல் தலைவிக்கு இயல்பாய்க் கூறப்பட்ட அச்சமும் நாணும் மடனும் என்பனவற்றுள் வேட்கையால் அச்ச நீங்கினவழி நாணும் மடனும் நீங்காவோ வென்றையுற்றார்க்கு அவை தலைமகற்கு ஏம மாதற் பொருட்டு நீங்காவாம் என்பதூஉம், வேட்கைக் குறிப்புக் கண்ணினான் அறியலா மென்பதூஉ முணர்த்தியவாறு. என்னை? நாணும் மடனும் இல்லாதாரைத் தலைமக்கள் அவமதிப்பாராதலால். 1உதாரணம்:--

கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்.” (குறள் - தாகூஎ)

இதனுள் 'கடலன்ன காமம் உழந்தும்' என்றதனான் வேட்கை மிக்க நிலையினையும், 'மடலேறாப் பெண்' என்றமையான் நாணும் மடனும் நீங்கா நிலையினையும் கூறுதல் காண்க.


கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்க ளென்ன பயனு மில.” குறள் - ௬௱)</poem>

இதனுள் அகத்துநிகழ் வேட்கையினைக் கண்ணினால் அறியக்கிடந்தமை கூறியவாறு காண்க.

௱௮. சொல்லெதிர் மொழித லருமைத் தாகலி
னல்ல கூற்றுமொழி யவள் வயி னான

என்பது, இதுவும் தலைவிமாட்டு ஒரு கூற்றுச் சொல் நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

தலைவன் இயற்கைப் புணர்ச்சி கருதிக்கூறுஞ் சொல்லெதிர் தான் வேட்கைக் குறிப்பினளாயினும் அதற்குடம்பட்ட நெறியைக் கூறுதல் அருமையுடைத் தாதலான் அதற்கு உடம்பாடல்லாத கூற்றுமொழி தலைவியிடத்தன என்றவாறு. என்றது இசைவில்லாதாரைப்போலக் கூறுதல்.

உதாரணம்:--

யாரிவ னென்னை விலக்குவா னீருளர்
பூந்தா மரைப் போது தந்த விரவுத்தார்க்
கல்லாப் பொதுவனை நீமாறு நின்னொடு
சொல்லலோம் பென்றா ரெமர்" (கலித்-ாய்வு)

எனவரும். இதன்பின்,

"எவன் கொலோ
மாயப் பொதுவ னுரைத்த வுரையெல்லாம்
வாயாவ தாயிற் றலைப்பட்டாம் பொய்யாயிற்
சாயலின் மார்பிற் கமழ்தார் குழைத்தவென் [கலித்-௱௰௨]


(பிரதி)-1. இது தொடங்கிச் சூத்திரவுரையின் இறுதிவரையுள்ளது (த.மு.சொ.)