பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாயக் தொல்காப்பியம் - இளம்பூரணம் இதுவும், தோழிக்கு உரியதோர் திறன் உணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட கூறுபாட்டான் இருவர்மாட்டும் அன்புடைமை உணர்ந்த பின் னல்லது வழிபாட்டு நிலைமையாற் கூட்டத்திற்கு முயலப் பெறாள் தோழி என்றவாறு. 'அஃதேல்: உள்ளப்புணர்ச்சியானின்று மெய்யுறாது கூட்டத்திற்கு முயல்வார் உளர். ஆயின், அஃதெற்றும் பெறும் எனின் ஆண்டும் இருவர்மாட்டுள தாகிய அன்புடைமை யான் மனநிகழ்ச்சியுளகாக அக்நிகழ்ச்சி கண்டுழியும் முயலப்பெறு மென்று கொள்க. அத ஞானேயன்றே முன்னுஉணர்தல்' என்னும் சூத்திரத்தினும் - ‘புணர்ச்சியுடம் பதெல்' என்னாது 'மதியுடம் பாத வொரு மூவகைய' எனப் பொதுப்பட ஓதுவாராயிற் றென்.. அவ்வன் பினான் வரு நிகழ்ச்சி யுள்வழியும் இவ்விட மூன்றினும் காதலுண்மை அறிய லாகும். {ஙஅ ) 2.எ. முயற்சிக் காலத் ததற்பட காடிப் புணர்த்த லாற்றலு மவள் வயி னான. இதுவுமது. தோழி வழிமொழிந்து முயலுங்காலத்து அவன் நினைவின்கட்படுந் திறன் ஆராய்ந்து புணர்த்தலைச் செய்யும் அவளிடத்து என்றவாறு. அஃதாவது, 'இன்னுழிச் செல்' எனவும், இன்னுழி வா' எனவும், தலைவியை ஆயத்து ணின்றும் பிரித்துத் தனி நிறுத்திப் பட்டாங்கு கூறியும் பிறவர் ற்றானும் ஆராய்ந்து கட்டுதல். இவ்வைந்து சூத்திரத்தாலும் தோழிக்கு உரிய மரபு உணர்த்தியவாறு காண்க. (க.க) உஅ. குறியெனப் படுவ திரவினும் பகலினு 'மறியக் கிளந்த வாற்ற தென்ப. என்றது; மேல் ‘களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகும்' என்றார். அதற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று, குறி என்று சொல்லப்படுவது இரவினானும் பகலினானும் இருவரும் அறியச் சொல் "லப்பட்ட இடத்தையுடைத்து என்றவாறு. எனவே, இரவிற்குறி பகற்குறி என இருவகைப்படும் என்பது கொள்ளப்படும்.(ச) இரவிற் குறியே யில்லகத் துள்ளு மனையோர் கிளவி கேட்கும்வழி யதுவே மனையகம் புகா(அக் காலை யான. என்றது, இரவுக்குறிக்கு இடமுணர்த்துதல் நுதலிற்று. இரவுக்குறியாம் இடமே இல்லகத்துள் - மனையகம்புகாவிடத்துக்கண் மனையோர் கிள விசேட்கும் அணிமைத்தாம் என்றவாறு. எனவே, மனைக்கும் எயிற்கும் நடுவணதோரிடம் என்று கொள்ளப்படும். பய. பகற்புணர் களனே புறனென மொழிப் வவளறி வுணா வருவழி யான. என்றது, பசர்குறி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (பிரதி) - 1. மனையோள். உசு.