பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்.

நதி.பான், வரியனி மிதிப்பப் புரிமுறுக் கவிழ்ந்த, மணங்கமழம்புய மணங்கயர் குகர்க்கு , மகனமர்க் துதவுந் தகவினர் கடுப்ப, முகனமர்ந் தொழுக்குத் துகளறு செந்தே, னுவட்டெறிந் தின்கழைப் படப்பையிற் புகுந்து, சுரிமுகச் சங்குழல் வரிமடை புடைப்ப, மட்டியல் பூந்துகள் கொட்டிச் சிறை செயுங், கவிழ்துணர்த் தேமாம் பொழில்புடை யுடுத்த, பம்பிய வளம்பொலி செம்பிகன் னாடன், பூந்த முளரி மானதத் தடமெனத், தேவரு மயிர்ப்பப் பூவளை யங்களை, வெண்ணிறச் சிறக ரண்ணிய மராள, மருந்திட வென்றும் விருந்திடு மணித்தடந், துதைதரு செல்வப் புதுவைமா நகரா, னுலம்பொரு மறுவில் வலம்படு புயத்தி, லுறைதரு கொற்றவை யுவகையொடு குறுநகை, யரும்பிய தொப்ப விரும்பிய வனைந்த, வளியடை கிடக்குந் தளவமா விகையான், மரவுரி யந்தணன் மறுத்துமுட் சினப்பிற், றகைக்குந் திறனலன் சிகைக்கனல் கொழிக்குங், குனிசவாட் படையுடைக் குரிசிலென் றுணர்குற், றன்னவன் றனைநீத் திந்நகர்ப் போந்த, துச்சைச் சிர்வமீ துண்மையே யாமெனக், கண்டவர் பலரும்வாய் விண்டிடச் சிறந்து, விழிகவர் வனப்பிற் சுழிகொள்வாம் பரியான், றன் னுட னுடன்றமர் தாக்கிய தெய்வக், கொன்னுறை வயிர வாட் கோட்டுமா னினங்க, ளகைப்பொடு வாய்வெரீஇத் திகைத்தோட் டெடுத்துச், செல்வுழி யின்றித் திசைதொறு மிமையா, நாட்டமொடு வட்சி வாட்டமொடு நிற்ப, வயங் கொடிறு மாந்து தயங்கிமதங் கவிழ்த்து , நிகரிகந் துலவும் புகர்முகக் களிற்றான், கடையுகத் தெழுந்த கருங்கட லென் னப், படையொடு துவன்றிய வடையல ருடையா, நெஞ்சு

90