பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

72


திருவள்ளுவர் திருக்குறள்.

பாடல்சால் சிறப்பிற் பதின்மர் செய்த, நாடுறு முரைகளுட் பீடமைந் தோங்கும், பரிமே லழகர் பண்ணிய வுரையொடு, விரிகடல் சூழ்புவி மேவி விளங்கப், பரிவுறு மச்சிற் பதித்துத் தருகெனக், கற்பகச் சோலை ககனத் துறு மென, பொற்புறு புலவர் புகலுவ ரஃது, நம்போன் மாறா நல்வன முடைத்தெனி, லம்பர்ச் சென்றினி தறிய லாமென, வெண்ணிச் சென்றாங் கெழிலுற வளர்ந்து, விண்ணுற நிவந்த வியன்மரம் பொழிற்கட், சிவந்தழை மனத்துச் செவ்வியோர்க் கிடமாய்க், கவின் றிகழ் காரைக் காலவ தரித்த, வம்மைதிரு வுளங்கனிந் தடியார்க் களித்த, கனிக்கெதிராகக் கண்ணுத லருளிய, யினிக் ததே மாங்கனி யிப்பொழிற் கனியே, யென்னக் கிளைதொறுந் துன்னிக் கனிந்த, வெண்ணிலாக் கனிகளை யுண்ண விரும்பி, வாவிப் புகுந்திள மந்திக ளெல்லா, மேவியத் தருக்கண் மீமிசை யிருந்து, தாவிப் புகுந்தத் தருநுனி யேறி, யோவிலக் கனிகவர்ந் துணவலி யின்றிக், கூனடை வெரிநின் மேன்மயி ரெலாமுதிர்ந், திருகண் குழியா வென்பெலாம் வெளிப்பட், டகடுற வொட்டி யடுபசி வருத்த, வண்ணாந்து நோக்கி நண்ணி யிருக்கு, முதுபெரு மந்திகண் முன்னர்முன் னுகுத்து, வெறுத்திட வூட்டி விழைந்துபின் னுண்டு, தாமுயன் றுண்ணுந் தகுவலி யில்லா, வுறவினர்க் கூட்டியுண் ணறவரை நிகர்க்கு, நலமலி செம்பி நன்னா டுடையான், மேரு வொன் றென்று விளம்புதல் பொய்யென், றாரு மியம்ப வளவற வுயர்ந்து, செம்பொனா னியன்றபல் செழுமணி மாடத், தும்ப ருலாவு மொளியிழை மடவா, ரன்புறு மாடவ ரணுக நோக்கி, யின்புற முயங்க வெண்ணுதங் காதல், குறிப்பிற் புலப்படக் கொழுங்கனி யிதனைச், செவ்வாய்ப் பைஞ்சிறைச்

72