பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கூஉ தொல்காப்பியம் - இளம்பூரணம் உ-ம். எருவங்குழி; சேறு, தாது, பூழி எனவும்: செருவக்களம் ; சேனை, தானை. பறை எனவும் வரும். 'தெரியுங்காலை' என்றதனால், எரு என்பதற்குப் பெரும்பான்மை மெல்லெழுத் துப்பேறும் சிறுபான்மை வல்லெழுத்துப்பேறும், செரு என்பதற்குச் சிறுபான்மை வல்லெழுத்துப்பேறும் கொள்க. எருங்குழி, எருக்குழி, செருக்களம் எனவரும். 'வல்லெழுத்தியற்கை' என்றதனான், உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றவழி அவ்விருமொழிக்கும் அதிகார வல்லெழுத்துவீழ்வும் கொள்க. எருவின் கடுமை, செருவின்கடுமை எனவரும். இன்னும் அதனானே, 'அம்மொடு சிவணித் திரிபிட னுடைய' என வல்லெழுத் தின் கண்ணதாக வரைந்து கூறினமையின், அம்முச்சாரியை இயல்புகணத்துக்கண் பெறுவன கொள்க. எருவஞாற்சி, செருவஞாற்சி எனவரும். உசு. ழகர வுகர நீடிட னுடைத்தே உகரம் வருத லாவயி னான். (ருஅ). இஃது, இவ்வீற்றிற் சிலவற்றிற்குச் செய்யுளுள் எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று. இ-ள்:- ழகர உகரம் நீடு இடன் உடைத்து - இவ்வீற்று மொழிகளுள் ழகரத் தொடுகூடிய உகரவீற்றுமொழி அவ்வுகரம் ஊகாரமாய் நீண்டு முடியும் இடன் உடைத்து; அவயின் உகரம் வருதல் - அவ்விடத்து உகரம் வந்துமுடிக. 'இடனுடைத்து' என்றதனான், இது செய்யுளிடத்தெனக்கொள்க. உ-ம். "பழூஉப்பல் லன்ன பருவுகிர்ப் பாவடி" எனவரும். உசு. ஒடுமரக் கிளவி யுதிமர விற்றே. (@) இஃது, இவ்வீற்று மரப்பெயருள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தல் நுதலிற்று. இ-ள் :- ஒடு மரக்கிளவி உதிமா இயற்று-ஒடு என்னும் மரத்தினை உணரநின்ற சொல் உதி என்னும் மரத்தின் இயல்பிற்றாய் மெல்லெழுத்துப் பெற்றுமுடியும். உ-ம். ஒடுங்கோடு; செதிள், தோல், பூ எனவரும். உசுங. சுட்டுமுத லிறுதி யுறாபிய னிலையும் ஒற்றிடை மிக்கஅ வங்லெழுத் தியற்கை. இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்தல் நுதலிற்று. இடள்:-சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும் - சுட்டெழுத்தினை முதலாக வுடைய உகரவீற்றுச் சொற்கள் உருபுபுணர்ச்சியிற்சொன்ன இயல்பிலே நின்று அன் சாரியை பெற்று உகரம் கெட்டு முடியும்; வல்லெழுத்து இயற்கை ஒற்று இடைமிகா- அவ்விடத்து வல்லெழுத்து இயற்கையாகிய ஒற்று இடைக்கண் மிகா. உ-ம். அதன்கோடு, இதன்கோடு, உதன்கோடு; செதிள், தோல், பூ எனவரும். 'ஒற்று இடைமிகா' என்றதனால், சாரியை வகுப்ப வல்லெழுத்து மிகாதென்பது பெற்றாம். 'வல்லெழுத்தியற்கை' என்றதனால், இவ்வீற்றுள் உருபிற்குச்சென்ற சாரி