பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கூச தொல்காப்பியம் - இளம்பூரணம் இஃது, அவ்வீற்றுள் ஒன்றற்கு உகரமும்வல்லெழுத்தும் விலக்கிப் பெரும்பான்மை மெல்லெழுத்தும் சிறுபான்மை வல்லெழுத்தும் பெறுமென எய்தியது விலக்கிப் பிறிது விதிவகுத்தல் நுதலிற்று. இ-ள்:-பூ என் ஒரு பெயர் அ இயல்பு இன்று - பூ என்னும் ஊகாரவீற்றை யுடைய ஒரு பெயர் மேற்சொன்ன உகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும் அந்த இயல்பில்லாமையை உடைத்து. எனவே, வேறு ஓர் இயல்பிற்றாய் மெல்லெழுத்து மிக்குமுடியும். அ வயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்து - அவ்விடத்து அம்மெல்லெழுத்தே யன்றி வல்லெழுத்து மிக்கு முடிதலும் உரித்து. மெல்லெழுத்துப் பெறுமென்றது, உரையிற் கோடலாற் கொள்ளப்பட்டது. உ-ம். பூங்கொடி, பூக்கொடி; செய்கை, தாமம்,பந்து எனவரும். ஊவெ னொருபெய ராவொடு சிவணும். (off) இஃது, இன்னும் அவ்வீற்றுள் ஒன்றற்கு உகரமும் வல்லெழுத்தும் விலக்கி நிலை மொழி னகரம் பெறுமென எய்தியது விலக்கிப் பிறி துவிதி வகுத்தல் நுதலிற்று. இ-ள்:- ஊ என் ஒரு பெயர் ஆவொடு சிவணும்-ஊ என்று சொல்லப்படும் ஊகாரவீற்றையுடைய ஒரு பெயர் ஆகாரவீற்றில் ஆ என்னும் சொல்லொடு பொரு ந்தி உகரமும் வல்லெழுத்தும் பெறாது நிலைமொழி னகரவொற்றுப் பெற்று முடியும். உ-ம். ஊன்குறை; செய்கை தலை, புறம் எனவரும். உஎடு. அக்கென் சாரியை பெறுதலு முரித்தே தக்கவழி யறிதல் வழக்கத் தான. (கூஎ) இஃது, இன்னும் அதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. இ-ள்:- அக்கு என் சாரியை பெறுதலும் உரித்து - அதிகாரத்தான் நின்ற ஊ என்னும் பெயர் மேற்கூறிய னகாத்தோடு அக்கு என்னும் சாரியை பெற்று முடிதலும் உரித்து; வழக்கத்தான் தக்கவழி அறிதல்-வழக்கிடத்து அம்முடிபு தக்க இடம் அறிக. 'தக்க வழியறிதல்' என்றதனால், சாரியை பெற்றவழி நிலைமொழி னகரம் விலக் குண்ணாது நிற்றலும் முன் மாட்டேற்றால் விலக்குண்ட வல்லெழுத்துக் கெடாதுநிற்ற லும் கொள்க. உ-ம். ஊனக்குறை; செய்கை, தலை, புறம் எனவரும். 'வழக்கத்தான' என்றதனான், இவ்வீற்று உருபிற்குச் சென்ற சாரியை பொருட் கண் சென்றவழி இயைபுவல்லெழுத்து வீழ்க்க. கொண்மூவின் குழாம் எனவரும். (கூஅ) ஆடூஉ மகடூஉ வாயிரு பெயர்க்கும் உஎக. இன்னிடை வரினு மான மில்லை. இஃது, அவ்வீற்று உயர்திணைப்பெயர்க்கு முன்எய்திய வல்லெழுத்தேயன்றி, சாரியையும் பெறுமென எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. இ-ள்:- ஆடூஉ மகடூஉ அ இரு பெயர்க்கும் - ஆடூஉ மகடூஉவாகிய அவ்விரண்டு பெயர்க்கும், இன் இடைவரினும் மானம் இல்லை-மேல் "குற்றெழுத்திம்பரும் [உயிர் மயங்கியல் - கூரு] என்னும் சூத்திரத்தின் "நிற்றல்" என்பதனால் வந்த வல்லெழுத் தேயன்றி இன்சாரியை இடை வரினும் குற்றம் இல்லை.