பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கூஅ உஅச. தொல்காப்பியம் - இளம்பூரணம் பளையு மரையு மாவிரைக் கிளவியும் நினையுங் காலை யம்மொடு சிவணும் ஐயெ ளிறுதி யரைவரைந்து கெடுமே மெய்யவ ணொழிய வென்மனார் புலவர். இதுவும் அது. இ-ள் :- பனையும் அசையும் அவிரைக்கிளவியும் பனை என்னும் சொல்லும் அரை என்னும் சொல்லும் அவிரை என்னும் சொல்லும் நினையுங்காலை அம்மொடு சிவனும் ஆராயுங்காலத்து மேற்கூறிய வல்லெழுத்து மிகாது அம் என்னும் சாரியையொடு பொருந்தி முடியும். ஐ என் இறுதி அரை வரைந்துகெடும்-அவ்விடத்து ஐ என்னும் ஈறு அரை என்னும் சொல்லை நீக்கிக்கெகிம், மெய் அவண் ஒழிய என்மனார் புலவர் தன்னலூசப்பட்ட மெய் அச்சொல்லிடத்தே ஒழியவென்று சொல்லுவர் புலவர். உ-ம். பனங்காய்; செதிள், தோல், பூ எனவும்: அரையங்கோடு; செதிள், தோல், பூ எனவும்: ஆலிரங்கோடு; செதிள், தோல், பூ எனவும் வரும். பூ 'நினையுங்காலை' என்றதனால், பிறவும் தூதுணை,வழுதுணை, தில்லை, ஒலை எனவரு வனவற்றிற்கும் அம்முக்கெகடுத்து ஐகாரம்கெடுத்துத் தூதுணங்காய், வழுதுணங்காய் தில்லக்காய், நிலம்போழ் என்று முடிக்க. உ அரு. பனையின் முன்ன ரட்டுவரு காலை இதுவும் அது. கிலையின் றாகு மையெ னுயிரே ஆகாரம் வருத லாவயி னான். (அக) இ-ள் :- பனையின்முன்னர் அட்டு வருகாலை - மேற்கூறிய வழியேயன்றி பனை என்னும் சொல்லின்முன்னர் அட்டு என்னும் சொல் வருமொழியாய் வருங்காலத்து, நிலை இன்றாகும் ஐ என் உயிர்-நிற்றல் இன்றாம் ஐ என்னும் உயிர்; அ வயின் ஆகாரம் வருதல் - அவ்விடத்து ஆகாரம் வந்து அம்மெய்ம்மேல் ஏறிமுடிக. உ-ம். பனாஅட்டு எனவரும். 'ஆவயின்' என்றதனால், விச்சாவாதி என்முற்போல்வனவற்றது வேற்றுமை குடிபுகொள்க. உஅக. கொடிமுன் வரினே யையவ ணிற்பக் கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி. இதயும் அது. (அ) இ-ள்:- கொடி முன் யரின் -கொடி என்னும் சொல் பனை என்னும் சொல்முன் னர்வரின், ஐ அவண் நிற்ப வல்லெழுத்து மிகுதி கடிநிலை இன்று - மேற் கெடும் எனப் பட்ட ஐகாரம் ஆண்டுக் கெடாதே சிற்ப வல்வெழுத்துமிகுதி நீக்கும் நிலைமையின்று. உ-ம். பனைக்கொடி எனவரும். 'கடிநிலை' என்றதனான், இவ்வீற்றுள் எடுத்தோத்தானும் இலேசினானும் அம்முச் சாரியையும் பிறசாரியையும் பெற்றவழி இயைபுவல்லெழுத்து வீழ்க்க. இன்னும் இதனானே,உறுப்பிற்குச் சென்ற சாரியை பொருட்குச் சென்றவழியும் இயைபுவல் லெழுத்து வீழ்க்க. பனையின்காய், அரையின்கோடு, ஆவிசையின்கோடு எனவும்; விசை