பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ளகூ தொல்காப்பியம் - இளம்பூரணம் இதனைத் தொழிற்பெயரெல்லாம்" (சூத்திரம்-யக] என்பதன்பின் வையாத முறையன்றிய கூற்றினான், முரண்கடுமை என்னும் இயல்பும், அரண்கடுமை, அரட் கடுமை என்னும் உறழ்ச்சியும் கொள்க. கூடுக. மகர விறுதி வேற்றுமை யாயின் துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே. (W) இது, மகரவீற்றிற்கு மேற்கூறிய ணகரவீற்று வேற்றுமை முடிபோடு இயைய வேற்றுமைமுடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:-மகர இறுதி வேற்றுமையாயின் -மகரவீற்றுப் பெயர்ச்சொல் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் ணாயின், துவரக் கெட்டு வல்லெழுத்து மிகும் -அம்மகரம் முற் றக்கெட்டு வருமொழி வல்லெழுத்து மிக்குமுடியும். உ-ம். மாக்கோடு, செதிள், தோல், பூ எனவரும். 'துவர' என்றதனான், இயல்புகணத்துக்கண்ணும் உயர்திணைப்பெயர்க்கண்ணும் விரவுப்பெயர்க்கண்ணும் மகரக்கேடு கொள்க - மரஞாண்,-நூல், மணி, யாழ், வட்டு, அடை, ஆடை எனவும்; நங்கை; எங்கை,-செவி, தலை, புறம் எனவும்: நுங்கை, தங்கை எனவும் வரும். ஙயஉ. அகர ஆகாரம் வருஉங் காலை ஈற்றுமிசை யகர நீடலுமுரித்தே. இஃது, அவ்வீற்றுமுடிபு வேற்றுமையுடையன கூறுதல் நுதலிற்று. (யரு) இ-ள்:- அகரம் ஆகாரம் வருங்காலை - அகரமுதல்மொழியும் ஆகாரமுதல்மொழி யும் வருமொழியாய் வருங்காலை, ஈற்றுமிசை அகரம் நீடலும் உரித்து - நிலைமொழிக் கண் ஈற்றின்மேல்நின்ற அகரம் நீளாது நிற்பதேயன்றி நீண்டுமுடிதலும் உரித்து. உ-ம். மரா அடி, குளாஅம்பல் எனவும்; மரவடி, குளாவாம்பல் எனவும் வரும். வருமொழி முற்கூறியவதனான், இவ்வீற்றுட் பிறவும் வேறுபாட்டின் முடிபு கொள்க. கோணாகோணம், கோணாவட்டம் எனவரும். முன்னர்ச் "செல்வழியறிதல்" [சூத்-ய) என்பதனால், குளாஅம்பல் என்புழி வருமொழி ஆகாரக்குறுக்கமும், கோணாகோணம் என்புழி வருமொழி வல்லெழுத்துக் கேடும் கொள்க. [கோணாகோணம், கோணாவட்டம் என்பனவற்றுள் கோணத்துள் வட்டம் வன எழனுருபுவிரிக்க.] கூடுங. மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே செல்வழி யறிதல் வழக்கத் தான. கோணத்துட்கோணம் (யசு) இஃது, இவ்வீற்றுட்சிலவற்றிற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:- மெல்லெழுத்து உறழும் மொழியும் உள-மெல்லெழுத்தோடு உறழ்ந்து முடியும் மொழிகளும் உள; வழக்கத்தான் செல்வழி அறிதல்-வழக்கின்கண் அவைவழங் கும் இடம் அறிக உ-ம். குளங்கரை, குளக்கரை, சேறு,தாது,பூழி எனவரும்.