________________
எழுத்ததிகாரம் புள்ளிமயங்கியல் ளடுக உ-ம். எல்லாங்குறியவும் :- சிறியவும், தீயவும், பெரியவும் எனவும்: எல்லாங்குறிய ரும்; சிறியரும், தீயரும், பெரியரும் எனவும் ஒட்டுக. இனி உரையிற்கோடல் என்பதனால், இறுதி உம்மின்றி எல்லாங்குறிய, எல்லா கருங்குறியர் எனவும் வரும். மேல் இலேசிக்குறிநின்ற வல்லெழுத்தினோடு மெல்லெழுத்துவருத்தமையின், இஃது அல்வழியாயிற்து உயர்திணை யாயி னு நபிய னிலையும். இது, மேலதற்கு உயர்திணை முடிபு கூறுதல் நுதலிற்று. (உஅ ) இ-ள்:- உயர்திணையாயின் உருபு இயல் நிலையும் - அவ்வெல்லாமென்பது அஃறி ணைப்பெயராயன்றி உயர்திணைப்பெயராய் நின்ற நிலைமையாயின் உருபுபுணர்ச்சியின் இயல்பிலே நின்று ஆண்டுக்கூறிய நம்முச்சாரியை பெற்று முடியும். வற்றுவகுத்து செய்கை மேல் வகுத்தமையின், மகரக்கேடு கொள்க. இறுதி உம்மையும் அச்செய்கை மேலே வகுத்தமையிற் கொள்க. உ-ம். எல்லாநங்கையும்;-செவியும்,தலையும்,புறமும் எனவரும். மேல் "மானமில்லை" [சூத்திரம் -உஅ] என்றதனால், அல்வழிக்கண் வன்கணத்து மகரம் கெட்டு வல்லெழுத்து மிக்கு இறுதி உம்முப்பெற்று முடிதலும், இயல்புகணத் துக்கண் மகரம் கெட்டு இறுதி உம்முப்பெற்று முடிதலும் கொள்க. எல்லாக்கொல் லரும்; மணியகாரர்? சேவகரும், தச்சரும், புலவரும் எனவும் : எல்லாஞாயிறும்;-நாய கரும், மணியகாரரும், வணிகரும், அரசரும் எனவும் வரும். (உக) தம்ம ஞெருபெயர் மெல்லெழுத்து மிகுமே இதுவும், அவ்வீற்று விரவுப்பெயருள் ஒன்றற்கு வேற்றுமைமுடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:-நும் என் ஒரு பெயர் மெல்லெழுத்து மிகும் -நும் என்று சொல்லப் படுகின்ற ஓர் விரவுப்பெயர் வேற்றுமைக்கண் மெல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம். நுங்கை ;-செவி, தலை; புறம் எனவரும். மகரம் "துவர" (சூத்திரம் - கரு) என்ற இலேசினாற்கெட்டது. 'ஒரு பெயர்' என்றதனான், ஞகர நகரங்கள்வந்த இடத்தும் அவ்வொற்றுமிகுதல் கொள்க.நுஞ்ஞாண், நுந்நூல் என வரும். ஒன்றினமுடித்தல்' என்பதனால், உங்கை என உம் என்பதன் முடிபும் இவ்வீற் றாகக் கொள்க. அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை உக்கெட நின்ற மெய்வயி னீவர இஇடை நிலைஇ யீறுடெ ரகரம் நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே அம்பாள் மொழியயி னியற்கை யாகும். இது, மேலதற்கு அல்வழி முடிபுகூறுதல் நுதலிற்று. (21)