பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ள உய தொல்காப்பியம் - இளம்பூரணம் கள் ஒழித்து உருபுபுபுணர்ச்சியிற் கூறிய இயல்பின்கண்ணே நிலைபெற்றுத் தான் என் பது நெடுமுதல் குறுகித்தன் என்றாயும் யான் என்பது யகரம்கெட்டு ஆகாரம் ஏகார மாய் என் என்றாயும் முடியும். உ-ம். தன்கை,என்கை; செவி, தலை, புறம் எனவும்; தன்ஞாண், என்ஞான்; நூல், மணி, யாழ்,வட்டு, அடை, ஆடை எனவும் வரும். கூருசு. வேற்றுமை யல்வழிக் குறுகலுந் திரிதலும் தோற்ற மில்லை யென்மனார் புலவர். இது, மேலவற்றிற்கு அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (ருஎ) இ-ள்:- வேற்றுமை அல்வழி - மேற்கூறிய தான் யான் என்னும் பெயர்கள் வேற்றுமைப்புணர்ச்சி யல்லாத விடத்து, குறுகலும் திரிதலும் தோற்றம் இல்லை என் மனார் புலவர்-தான் என்பது நெடுமுதல் குறுகலும் யான் என்பது அவ்வாறு திரிதலும் தோற்ற மின்றி இயல்பாய் முடியும். உ-ம். தான்குறியன்; சிறியன்ே, தீயன், பெரியன், ஞான்றான்,நீண்டான்,மாண் டான் எனவும்: யான்குறியேன்; சிறிறேன்; தீயேன், பெரியேன், ஞான்றேன், நீண் டேன், மாண்டேன் எனவும் வரும். 'தோற்றம்' என்றதனான், வேற்றுமைக்கண் அவ்வாறன்றித் திரிதலும் கொள்க.. உ-ம். தற்புகழ், தற்பகை எனவும்; எற்பறை, எற்பாடி எனவும் வரும். (ருஅ ) ஙருரு. அழனென் னி றுதிகெட வல்லெழுத்து மிகுமே. இஃது, இவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதிவகுத்தல் நுதலிற்று. இ-ள்:-அழன் என் இறுதி கெட வல்லெழுத்து மிகும் - அழன் என்னும் சொல் அழன் என்னும் னகரவீறு கெ வருமொழிவல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம். அழக்குடம்,சாடி, தூதை, பானை எனவரும், அழனென்பது பிணம்.(ருக கூருங. முன்னென் கிளவி முன்னர்த் தோன்றும் இல்லென் கிளவிமிசை றகர மொற்றல் தொல்லியன் மருங்கின் மரீஇய மரபே. இஃது, இவ்வீற்றுள் இலக்கணத்தோடு பொருந்திய மரூஉக்களுள் ஒன்றற்கு. வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:முன் என் கிளவிமுன்னர்த் தோன்றும் இல் என் கிளவியிசை றகரம் ஒற்றல் - முன் என்னும் சொல்லின்முன்னர்த் தோன்றும் இல் என்னும் சொல்லின் மேல் றகரவொற்று வந்து முடிதல், தொல் இயல் மருங்கின் மரீஇய மரபு. பழையதா கிய இயல்பினையுடைய விடத்து மருவிவந்த இலக்கணமுடிபு. உ-ம். முன்றில் எனவரும். இது கடைக்கண் என்றாற்போலவருஉம் மரூஉ முடிபுபோ லன்றி முன்னில் என ஒற்றிரட்டி முடியற்பாலது இருமொழிக்கும் இயல்பிலதோர் ஒற்று மிக்கு முடிந்த மரூஉமுடிபு. (@).