பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உஉ தொல்காப்பியம் - இளம்பூரணம் இள்:- மகன் லினை கிளப்பின் முதல் நிலை இயந்து அத்தாய் என்னும் சொல் மசன விளையைக் கிளந்து சொல்லுமிடத்து இவ்வீற்று முதற்கண் கூறிய நிலைமையின் இயல்பிற்றாய் வல்லெழுத்து மிக்குமுடியும். உம் மகன்றாய்க்கலாம்; செரு, தார், படை எனவரும். 'மகன்விலை' என்றது மகற்குத்தாயாய்ப் பயன்படும் கிலைமையன்றி, அவனோடு பகைத்த நிலைமையை. நசுக. மெல்லெழுத் துறழு மொழியுமா ருணவே இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்கு எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. (கச) இ-ள்:மெல்லெழுத்து உறழும் மொழியும் உள - மேற்கூறிய வல்லெழுத்தி னொடு மெல்லெழுத்து மிக்கும் உறழ்ந்தும் முடியும் மொழிகளும் உள. உ-ம். வேய்ங்குறை; வேய்க்குறை: சிறை, தலை, புறம் எனவரும். ௩௯.உ. அல்வழி யென்ஸா மியல்பென மொழிப. இஃது, இவ்வீற்று அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (கூடு) இ-ள்:- அல்வழி எல்லாம் இயல்பு என மொழிப - யகரவீற்று அல்வழியெல்ல இயல்பாய் முடியும் என்று சொல்லுவர் புலவர். உ-ம். நாயகடிது; சிறிது, தீது, பெரிது எனவரும். வ 'எல்லாம்' என்றதனால், இவ்வீற்து உருபு வாராது, உருபின் பொருள்படவ இடைச்சொல் முடிபும், வினையெச்சமுடியும், இருபெயரொட்டுப்பண்புத்தொகை யும், அல்வழியுறழ்ச்சிமுடியும் கொள்க. அவ்வாய்க்கொண்டான், இவ்வாய்க்கொண்டா உள்ளாய்க்கொண்டான், எவ்வாய்க்கொண்டான்: சென்றான், தந்தான். போயித் எனவும்: தாய்க்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எனவும்: பொ சொல், மெய்ச்சொல் எனவும்: வேய்கடிது, வேய்க்கடிது; சிறிது, தீது,பெ எனவும் வரும். கூகூகூ. ரகார விறுதி யகார வியற்றே, இது, சகாரவீற்று வேற்றுமைமுமுடிபு கூறுதல் நுதலிற்று. Q இ-ள்:- ரசா இறுதி யகார இயற்று-ரகாரவீற்றுப் பெயர் வேற்றுமைப் பொ புணர்ச்சிக்கண் யகாரவீற்று இயல்பிற்குய் வல்யெழுத்து வன்தவழி மிக்கு முடியும். உம் தேர்க்கால்; செய்கை, தலை, புறம் எனவரும். ஆரும் வெதிருஞ் சாரும் பீரும் மெல்லெழுத்து மிகுநன் மெய்பெறத் தோன்றும். இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறி துவிதி கூறு நூதலிற்று இ- ன் :- ஆரும் வெதிரும் சாரும் பீரும்-ஆர் என்னும் சொல்லும் வெதிர் என்னும் சொல்லும் சார் என்னும் சொல்லும் பீர் என்னும் சொல்லும், மெல்லெழுத்து மிகுதல் மெய்பெற தோன்றும் - மெல்லெழுத்து மிக்குமுடிதல் மெய்ம்மைபெறத் தோன்றும். உ-ம். ஆர்ங்கோடு, வெதிர்ங்கோடு, சார்ங்கோடு, பிர்ங்கோது; செதிள், தோல், பூ எனவகும்.