பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் ள உங 'மெய்பெறி' என்றதனால், பிறவும் மெல்லெழுத்து மிகுதல் கொள்க. குதிர்ங்கோடு துவர்ங்கோடு; செதிள், தோல், பூ எனவரும். இன்னும் அதனானே, பீர் என்பது மேல் அம்முப்பெற்றவழி இயைபு வல்லெ ழுத்துவீழ்வும் கொள்க. (24) கூகூரு. சாரென் கிளவி காழ்வபின் வலிக்கும். இது, மேலனவற்றுட் சார் என்பதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. இ-ள்:- சார் என்கிளவி காழ்வயின் வலிக்கும் - சார் என்னும் சொல் காழ் என் னும் சொல்லொடு புணருமிடத்து வல்லெழுத்து மிக்குப் புணரும். உ-ம். சார்க்காழ் எனவரும். பீரென் கிளவி யம்மொடுஞ் சிவணும். (கூகூ) இஃது, அவற்றுட் பீர் என்பதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுத லிற்று. இ-ள்:-பீர் என் கிளவி அம்மொடும் சிவணும்-பீர் என்னும் சொல் மெல்லெ எழுத்தேயன்றி அம்முச்சாரியையும் பெற்றுவந்துமுடியும். உ-ம். பீரங்கோடு; செதிள், தோல், பூ எனவரும். ௩எ. லகார விறுதி னகார வியற்றே (எய) இது, லகார வீற்றிற்கு னகாரவீற்று வேற்றுமையோடு இயைய வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:-லகார இறுதி னகார இயற்று- லகார வீற்றுப்பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் வல்லெழுத்து முதன்மொழி வரின் னகாரவீற்றின் இயல் பிற்றாய் லகாரம் றகாரமாய்த் திரிந்துமுடியும். உ-ம். கற்குறை; சிறை, தலை, புறம் எனவரும். கூகஅ. மெல்லெழுத் தியை னகார மாகும். இஃது, அவ்வீறு மென்கணத்தொடு முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (எக) இ-ள்:-மெல்லெழுத்து இயையின் னகாரம் ஆகும்- அவ்வீறு மென்கணம் வந்து இயையின் லகாரம் னகாரமாய்த் திரிந்துமுடியும். உ-ம். கன்ஞெரி; நுனி, முறி எனவரும். இச்சூத்திரத்தினை வேற்றுமையது ஈற்றுக்கண் அல்வழியது எடுத்துக்கோடற்கண் சிங்கநோக்காக வைத்தமையான், அல்வழிக்கும் இம்முடிபு கொள்க. கன்ஞெரிந்தது; நீண்டது, மாண்டது எனவரும். அல்வழி யெல்லா முறமென மொழிப. இஃது, அவ்வீற்றிற்கு அல்வழிமுடிபு கூறுதல் நுதலிற்று. (எஉ) இ-ள்:- அல்வழி எல்லாம் உறழ் என மொழிப - அவ்வீறு அல்வழிக்கணெல் லாம் தந்திரிபு வல்லெழுத்தினோடு உறழ்ந்து முடியும். உ-ம். கல்குறிது, கற்குறிது; சிறிது தீது, பெரிது எனவரும்.