பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ளஙய தொல்காப்பியம் - இளம்பூரணம் கிளவி [யின்] இடை ஒற்றுக் கெடுவழி ஆய்தமாகிய புள்ளி நிற்றல் வேண்டும். உ-ம். எழுபஃது எனவரும். ஙகஉ ஆயிரம் மருவழி யுகால் கெடுமே. இது, மேலதற்கு எய்தியது ஒருமருங்கு மறுத்தல் நுதலிற்று. (கூரு) இ-ள்:- ஆயிரம் வருவழி உகரம் கெடும் - (அவ் ஏழ் என்பது) ஆயிரம் என்பது வருமிடத்து (முன் பெற்ற) உகரம் பெறாது முடியும். உ-ம். ஏழாயிரம் எனவரும்.[ 'ஏகாரம்' ஈற்றசை.) நூறூர்ந்து வரூஉ மாயிரக் கிளவிக்குக் கூறிய நெடுமுதல் குறுக்க மின்றே. இதுவும், மேலதற்கு ஒருவழி எய்தியது முடிவதும் விலக்குகின்றது. இ-ள்:- நூறு ஊர்ந்துவரும் ஆயிரக்கிளவிக்கு - (அவ் ஏழ் என்பது) நூறு என் னும் சொல் ஊர்ந்து வருகின்ற ஆயிரக்கிளவியாகிய தூருயிரம் என்பதற்கு, கூறிய நெடு முதல் குறுக்கம் இன்று- (முன்) கூறிய நெடுமுதல் குறுகி உகரம் பெறுதல் இன்று. உ-ம். ஏழ் நூறாயிரம் எனவரும். ஆம். 'கூறிய' என்றதனான், நெடுமுதல் குறுகி உகரம் பெற்று எழுநூறாயிரம் என்றும் இவ்விலேசினானே ஏழாயிரம் என்றும் ஆம். இன்னும் அதனானே, இயல்புகணத்து முடிவு கொள்க. எழுஞாயிறு, எழுநாள் எனவரும்.['ஏகாரம்' ஈற்றசை.) ௩௯௪. ஐயம் பல்லென வரூஉ மிறுதி அல்பெய ரெண்ணு மாயிய னிலையும். இதுவும் மேலதற்கு ஒருவழி எய்தியது முழுவதும் விலக்குகின்றது. (கூஎ) இ-ள்:-ஐ அம் பல் என வரும் இறுதி அல் பெயர் எண்ணும் -(அவ் ஏழ் என் னும் எண்தான்) ஐ என்றும் அம் என்றும் பல் என்றும் வருகின்ற இறுதிகளையுடைய (பொருட்பெயர்) அல்லாத எண்ணுப்பெயராகிய தாமரை வெள்ளம் ஆம்பல் என்பன வும் (வந்தால்), அ இயல் நிலையும்-(நெடுமுதல் குறுக்கம் இன்றி உகரம் பெறாது) அவ் இயல்பின் கண்ணே நின்று முடியும். உ-ம். ஏழ்தாமரை, ஏழ்வெள்ளம், ஏழாப்பல் எனவரும். ['ஆகாரம்' செய்யுள் விகாரம்.] கூகூரு. உயிர்முன் வரினு மாயிய றிரியாது. இதுவும், மேலதற்கு எய்தியது ஒருவழி விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. இ-ள்:-உயிர் முன் வரினும்-அவ் ஏழ் என்பது அளவு முதலிய பெயர்களுள்) உயிர் முதல்மொழி[முன்] வரினும், அ இயல் திரியாது-(நெடுமுதல் குறுகி உகரம் வராது முடியும்) அவ் இயல்பில் திரியாது முடியும். உ-ம். ஏழகல், ஏழுழக்கு, ஏழொன்று, ஏழிரண்டு எனவரும்.['ஆகாரம்' செய் யுள் விகாரம்.] (கக)