பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் ஙகூக கீழென் கிளவி யுறழத் தோன்றும். ளஙக இஃது, இவ் ஈற்றுள் ஒன்றற்கு வேற்றுமைக்கண் வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:-கீழ் என் கிளவி உறழ தோன்றும்- கீழ் என்னும் சொல் உறழ்ச்சியாகத் தோன்றி முடியும். உ-ம். கீழ் குழம்,கீழ்க்குழம் எனவரும். 'தோன்றும்' என்றதனான், நெடுமுதல் குறுகாது உகரம் வருதலும் கொள்க ஆங்கு] இயைபு வல்லெழுத்து இவ்வோத்தின் புறனடையான் வீழ்க்க. உ-ம். கீழுகுளம்; சேரி, தோட்டம், பாடி எனவரும். கூகள். ளகார விறுதி ணகார வியற்றே. (ITT) இது, ளகார ஈற்றிற்கு ணகார ஈற்று வேற்றுமைமுடிபோடு இயைய வேற் றுமைமுடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:-ளகார இறுதி ணகார இயற்று-ளகார (ஈற்றுப்பெயர் வேற்றுமைக்கண்) ணகார ஈற்று இயல்பிற்றாய் (வன்கணம் வந்தால் ளகாரம் டகாரமாய்த் திரிந்து) முடியும். உ-ம். முட்குறை; சிறை, தலை, புறம் எனவரும்.('ஏகாரம்' ஈற்றசை.) (ளக) கூகூஅ. மெல்லெழுத் தியையின் ணகாரமாகும். இது, மேலதற்கு மென்கணத்து முடிபு கூறுகின்றது. இ-ள்:மெல்லெழுத்து இயையின் ணகாரம் ஆகும் - (ளகார ஈறு) மெல் லெழுத்து (வருமொழியாய் வந்து) இயையின் ணகாரமாய் (த்திரிந்து) முடியும். உ-ம். முண் ஞெரி, நுனி, முறி எனவரும். இதனை வேற்றுமை இறுதிக் கண் அல்வழியது எடுத்துக் கோடற்கண் சிங்க நோக்காக வைத்தலின், அல்வழிக்கும் இம்முடிபு கொள்க. உ-ம். முன் ஞெரிந்தது; நீண்டது,மாண்டது எனவரும். கூகூகூ. அல்வழி யெல்லா முறமென மொழிப. இது, மேலதற்கு அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (m2) இ-ள்:- அல்வழி எல்லாம் உறழ் என மொழிப - (னகார ஈற்று) அல்வழிகளெல் லாம் (திரிந்தும் திரியாதும்) உறழ்ந்து முடிபும் என்று சொல்லுவர் (புலவர்). உ-ம். முள் கடிது, முட் கடிது; சிறிது, தீது, பெரிது எனவரும். 'எல்லாம்' என்றதனால், குணவேற்றுமைக்கண்ணும் இவ் வுறழ்ச்சி கொள்க. உ-ம். முள் குறுமை, முட் குறுமை; சிறுமை, தீமை, பெருமை எனவும்: கோள் கடுமை, கோட் கடுமை எனவும் வரும். இன்னும் அதனானே, உருபு வாராது உருபின் பொருள்பட வந்தவற்றின் முடி பும் கொள்க. உ-ம். அதோட் கொண்டான், இதோட் கொண்டான், உதோட் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எனவரும். (ATL)