பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம்-இளம்பூரணம் உ-ம். மக்கட்கை; செவி, தலை, புறம் என வரும். ['கிளவி' ஆகுபெயர். 'ஏகாரம்' ஈற்றசை.) சாசு. உணரக் கூறிய புணரியன் மருங்கின் கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே. இஃது இவ்வோத்திற்குப் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. () இ-ள்:- உணாக் கூறிய-உணரக் கூறப்பட்ட புள்ளியூறு [கள்],புணர் இயல் மருங் கின்- (வருமொழியோடு) புணரும் இயல்பிடத்து, கண்டு செயற்கு உரியவை கண்ணி னர் கொளல்-(மேல் முடித்த முடிபுகளேயன்றி வழக்கினுள்) கண்டு முடித்தற்குரிய பிற முடிபுகளைக் கருதிக் கொண்டு முடிக்க. உ-ம். விழன் குளம்; சேறு, தறை, பழனம் என இவை, னகார ஈற்று வேற் றுமைக்கண் திரியாது இயல்பாய் முடிந்தன. பொன்னப்பத்தம் என்பது அவ்வீறு அக்குப்பெற்று முடிந்தது. நீர் குறிது; சிறிது, தீது, பெரிது என்பது ரகார ஈற்று அல்வழி முடிபு. வேர் குறிது; வேர்க்குறிது [என்பது] அவ்வீற்று அல்வழி உறழ்ச்சி. அம்பர்க்கொண்டான், இம்பர்க்கொண்டான், உம்பர்க்கொண்டான், எம்பர்க் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என்பன அவ்வீற்றுள் உருபு வா ராது உருபின் பொருள்பட வந்தவற்றின் முடிபு. தகர்க்குட்டி என்பது அவ்வீற்று இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகிய அல்வழி முடிபு. வடசார்க்கூரை, தென்சார்க்கூரை என்பன அவ்வீற்று இலக்ணத்தோடு பொ ருந்திய மரூஉ முடிபு. உசிலங்கோடு, எலியாலங்கோடு என்பன லகார ஈற்று அம்முப்பேறு. கல்லம்பாறை என்பது அவ்வீற்று அல்வழி அம்முப்பேறு. அழலத்துக்கொண்டான் என்பது அவ்வீற்று அத்துப்பேறு. அழுக்கற்போர் என்பது அவ்வீற்று அவ்வழித்திரிபு. யாழ்குறிது சிறிது, பெரிது என்பன ழகார ஈற்று அல்வழி முடிபு. வீழ்குறிது, வீழ்க்குறிது என்பன அவ்வீற்று அல்வழி உறழ்ச்சி. தாழ்ப்பாவை என்பது அவ்வீற்று அல்வழி அக்குப்பேறு. இனி "உணரக்கூறிய" என்றதனால், குளத்தின்புறம், மரத்தின்புறம் என உரு பிற்கு எய்திய அத்தோடு இன்பெறுதலும் கொள்க. இனிக் "கண்ணினர்" என்றதனால், ஒருநாளைக் குழவி என னும் சாரியையும் வல்லெழுத்தும் பெற்று முடிந்தன கொள்க, ளகர ஈறு ஐ என் பிறவும், இவ்வோத்தின் வேறுபட வருவன வெல்லாம் இதன் அகத்து முடித் துக்கொள்க. எட்டாவது புள்ளிமயங்கியல் முற்றிற்று. (ளய)