பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சச தொல்காப்பியம் - இளம்பூரணம் இஃது, அப்பெருந்திசையோடு கோணத்திசை புணருமாறு உணர்த்துதல் நுத விந்து இ-ள்:- திரிபு வேறு கிளப்பின் -(அப்பெருந்திசைகளோடு) கோணத்திசைகளை வேறாகப் புணர்க்கும் இடத்து, ஒற்றும் இறுதியும் கெடுதல் வேண்டும் என்மனார் புல வர் - (அவ் உகரம் ஏறி நின்ற) ஒற்றும் அவ் ஈற்று உகரமும் கெட்டு முடிதல் வேண்டு மென்று சொல்லுவர் புலவர்; தெற்கொடு புணரும் காலை - தெற்கு என்னும் திசை யோடு புணரும் காலத்து, ஒற்று மெய் திரிந்து னகாரம் ஆகும் - (அதன்கண் நின்ற) றகார ஒற்று (த்தன் வடிவு) திரிந்து னகாரமாய் முடியும். 'திரிந்து' என்றதனான், வடக்கு என்பதன்கண் இடை நின்ற நகர ஒற்றுக் கெடுக்க. உ-ம்:-வட கிழக்கு, வடமேற்கு: தென் கிழக்கு, தென் மேற்கு எனவரும். 'வேறு' என்றதனால், திசைப்பெயரோடு பொருட்பெயருக்கும் இவ்விதி கொள்க. வட கடல், வட வரை எனவரும். 'மெய்' என்றதனான், அத்திசைப்பெயரோடு பொருட்பெயர் புணருமிடத்து இறு தியும் முதலும் திரிந்து முடிவனவெல்லாம் கொள்க. கீழ் கூரை, மேல் கூரை என வரும். சஙு சு . ஒன்று முதலாக வெட்ட னிறுதி எல்லா வெண்ணும் பத்தன் முன்வரின் குற்றிய லுகர மெய்யொடுங் கெடுமே முற்றவின் வரூஉ மிரண்டலங் கடையே. (2.67) இஃது, இவ்வீற்று எண்ணுப்பெயரோடு எண்ணுப்பெயருக்கு முடிபு கூறு கின்றது. இ-ள்:- ஒன்று முதலாக எட்டு என் இறுதி எல்லா எண்ணும் - ஒன்று என்னும் சொல் முதலாக எட்டு என்னும் சொல் இறுதியாகவுள்ள எல்லா எண்ணுப்பெயரும், பத்தன் முன்வரின் - பத்து என்னும் என்னுப்பெயர் முன்வரின், குற்றியலுகரம் மெய்யொடும் கெடும் (அப் பத்து என்னும் சொல்லிற்) குற்றியலுகரம் (தான் ஏறி நின்ற) மெய்யோடும் கெட்டு முடியும்; இரண்டு அலம் கடை முற்ற இன் வரும்- இரண்டாகிய எண்ணுப்பெயர் அல்லாத எண்ணுப்பெயரிடத்து முடிய இன் வந்து புணரும். உ-ம்:- பதினொன்று, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு,பதி னேழு, பதினெட்டு எனவரும். நிலைமொழி முற்கூறாததனால், பிறமொழியும் அவ் இன்பேறு கொள்க. ஒன்ப தின்பால், ஒன்பதில்கூறு எனவரும். 'முற்ற' என்றதனான், மேல் எடுத்தோத்தானும் இலேசானும் இன்பெறவழி பதிற்றொன்று, பதிற்றிரண்டு என்றாற்போல முடிபுகள் வேறுபட வருவனவெல்லாம் கொள்க. ['ஏகாரம்' இரண்டும் ஈற்றசை, உகர நீட்டம் செய்யுள் விகாரம்.] (உஅ )