பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ளசஅ தொல்காப்பியம் - இளம்பூரணம் இ-ள் :- அளந்து அறி கிளவியும் நிறை என் கிளவியும் தோன்றும் காலை-(மேற் கூறிய ஒன்று முதல் ஒன்பான்களின் முன்னர்) அளந்து அறியப்படும் அளவுப் பெயர்ச் சொல்லும் நிறை என்னும் பெயர்ச்சொல்லும் தோன்றுங்காலத்து, கிளந்த இயல அவ் ஒன்று முதல் ஒன்பான்கள் மேல் பத்து ஒன்பதனோடு புணரும் வழி கிளந்த இயல் பினவாய் முடியும். உ-ம்:- ஒரு கலம், இரு கலம்; சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, எனவும்: கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். 'தோன்றுங்காலை' என்றதனான், அவ்வெண்களின்முன் எடுத்தோத்தானும் இலே சானும் முடியாது நின்ற எண்ணுப்பெயரை யெல்லாம் இவ்விதியும் பிறவிதியும் எய்து வித்து முடித்துக்கொள்க. ஓரொன்று, ஒரிரண்டு; ஈரொன்று, ஈரிரண்டு; ஒரு முந்திரிகை, இரு முந்திரிகை; ஓரரைக்கால், ஈரரைக்கால்; ஒரு கால், இரு கால்; ஒரரை, ஈரரை, ஒரு முக்கால், இரு முக்கால் என ஒட்டிக்கொள்க. சசஎ. மூன்ற னொற்றே வந்த தொக்கும். இது, மாட் டேறு எய்தாததற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (சய ) இ-ள்: மூன்றன் ஒற்று வந்து ஒக்கும் - மூன்றாம் எண்ணின்கண் நின்ற னகார ஒற்று வருமொழியாய் வந்த அளவுப்பெயர் நிறைப்பெயரின் முத[லி]ல் வந்த ஒற்றோடு ஒத்த ஒற்றாய் முடியும். உ-ம்;-முக்கலம்; சாடி, தூதை, பானை எனவும்: கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும், மாட்டேற்றானே நாற்கலம்; சாடி, தூதை, பானை எனவும்: கழஞ்சு, தொடி பலம் எனவும் வரும். [ஏகாரம் அசை.) மசம் ஐந்த ஜெந்தே மெல்லெழுத் தாகும். இதுவும் அது. (சக) இ-ள்: ஐந்தன் ஒற்று மெல்லெழுத்து ஆகும் - ஐந்தாவதன்கண் நின்ற நகர ஒற்று (மேல் வருகின்ற வருமொழி முதல் வல்லெழுத்திற்கு ஏற்ற) மெல்லெழுத்தாய் முடியும். உ-ம்: ஐங்கலம், சாடி, தூதை, பானை எனவும்: ஐங்கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும்.(ஏகாரம் அசை.] ச௯. கஈத முதன்மொழி வரூஉங் காலை. (2) இது, மேற்கூறிய மூன்றற்கும் ஐந்தற்கும் வருமொழி வரையறுக்கின்றது. இள்:-கசதப முதல் மொழி வரும் காலை - (மூன்றன் ஒற்று வந்தது ஒப்ப தூஉம் ஐந்தன் ஒற்று மெல்லெழுத்தாவதூஉம் அவ்வளவுப்பெயர் நிறைப்பெயர் ஒன்ப தினும் வன்கணமாகிய ) க.ச.த ப முதல் மொழிகள் வந்த இடத்து. மேன் மாட்டேற்றானே, அறுகலம்; சாடி, தூதை, பானை எனவும்: அறுகழஞ்சு; தொடி பலம் எனவும் வரும்.