பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல். ளருஙு உ-ம்: ஓராயிரம், இராயிரம் எனவரும்.['ஏகாரம்' ஈற்றசை. முதல் ஈர்- முதல் இரண்டு. அவையாவன ஒரு, இரு என்பன.) சுசுரு. முதனிலை நீடினு மான மில்லை. இஃது, எய்தியதன் மேல் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று. (ருஅ) இ-ள்:- முதல் நிலை நீடினும் மானம் இல்லை - அம்முதல் ஈர் எண்ணின் முதற் கண் நின்ற ஒகர இகரங்கள் நீண்டு முடியினும் குற்றம் இல்லை. உ-ம்:- ஓராயிரம், ஈராயிரம் எனவரும். சுசுசு. மூன்ற னொற்றே வகாரமாகும். இதுவும் மாட்டேற்றோடு ஒவ்வா முடிபு கூறுதல் நுதலிற்று. (&) இ-ள்:- மூன்றன் ஒற்று வகாரம் ஆகும் - மூன்றாம் எண்ணின்கண் நின்றனகார ஒற்று வகர ஒற்றாய் முடியும். உ-ம்:- முவ்வாயிரம் எனவரும். 'முதனிலை' என்றதனான், முதல் நீண்டு வகர ஒற்றுக்கெட்டு மூவாயிரம் என்றும் வரும்.(ஏகாரம் அசை.) சகஎ. இதுவும் அது. நான்க னொற்றே லகார மாகும். இ-ள்:- நான்கன் ஒற்று லகாரம் ஆகும் ஒற்று லகர ஒற்றாய் முடியும். (W) - நான்காம் எண்ணின்கண் நின்றனகா (ord) உ-ம்:- நாலாயிரம் எனவரும்.(ஏகாரம் அசை.] சசுஅ. ஐந்த னொற்றே யகார மாகும். இதுவும் அது. இ-ள்:- ஓந்தன் ஒற்று யகாரம் ஆகும் - ஐந்தாம் எண்ணின்கண், நின்ற நகர ஒற்று யகர ஒற்றாய் முடியும். உ-ம்:- ஐயாயிரம் எனவரும். முன்னர் இவ்வாறு ஒதாமையான், ஐயகல், ஐயுழக்கு [என்பவை] உடம்படு மெய் பெற்றது. [ஏகாரம் அசை.) சகூகூ. இதுவும் அது. ஆறன் மருங்கிற் குற்றிய லுகரம் ஈறுமெய் யொழியக் கெடுதல் வேண்டும். (e) இ-ள்:- ஆறன் மருங்கின் குற்றியலுகரம் ஈறு மெய் ஒழிய கெடுதல் வேண்டும்- ஆறாம் எண்ணின்கண் நின்ற குற்றியலுகரம் (தான் ஏறிய) மெய்யாகிய றகர ஒற்றுக் கெடாது நிற்ப (உகரமாகிய அவ்வீறு தானே) கெட்டு முடிதல் வேண்டும். உ-ம்:- அறாயிரம் எனவரும். திரிந்ததன் திரிபது என்னும் நயத்தான், ஆறன் மருங்கின் என்று ஒதப்பட்டது. ஆறு என்பது அது எனக்குற்றியலுகரம் முற்றியலுகரமாக ஒதப்பட்டு நின்றமையின், அவ்வுகரக்கேடு ஒதப்பட்டது. ஈறு எனவும் மெய் எனவும் அவ்வுயிர் மெய்யைப் பிரித்துச் செய்கை ஓதினமை யான், அவ்வுயிர் மெய்யினை ஒற்றுமை நயத்தாற் குற்றியலுகரம் என்று ஓதினானாகக் கொள்க. 20