பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எடுது தொல்காப்பியம் - இளம்பூரணம் இரண்டுமுத லொன்பா னிறுதி முன்னர் வழங்கியன் மாவென் கிளவி தோன்றின் மகர வளபொடு திகாலு முரித்தே. இஃது, இரண்டு முதல் ஒன்பான்கள் முன்னர் அளவு முதலிய மூன்றற்கும் உரிய மா என்பது புணருமாறு கூறுகின்றது. இ-ள்:- துரண்டுமுதல் ஒன்பான் இறுதி முன்னர் - இரண்டு முதவாக ஒன்பது ஈருகச் சொல்லப்படுகின்ற எண்களின் முன்னர்; வழங்கு இயல் மா என் கிளவி தோன்றின் வழக்கின்கன்னே கிடக்கின்ற (விலக்கு மரம் முதலிய அல்லாத அளவு முதலியவற்றிற்குரிய)மா என்னும் சொல் தோன்றின், மகர அளபொடு நிகரலும் உரித்து -(இயல்பாய் முடிதலேயன்றி மேற் கூறிய) மண்டை என்றும் அளவுப்பெய ரோடு ஒத்து வேறுபட முடிவனவும் பெறும். உ-ம் :--செண்டுமா, இருமா; மூன்று மா, மும்மா;என ஒன்பதின்காறும் இவ்வாறு ஒட்டுக. இரண்டு முதல் ஒன்பான் என்று எடுத்தமையின், ஒன்றற்கு ஒருமா என்னும் முடிபேயன்றி ஒன்றுமா என்னும் முடிபு இல்லையாயிற்று. இவற்றுள், மிக்க எண் ணோடு குறைந்த எண் வருங்கால் உம்மைத்தொகையாகவும், குறைந்த எண்ணோடு மிக்கது வரிற் பண்புத்தொகையாகவும் முடித்தார் என்க. ('ஏகாரம்' ஈற்றசை.) சஅக. எனவென வரூஉம் புள்ளி யிறுதிமுன் உம்முங் கெழுவு முளப்படப் பிறவும் அன்ன மரபின் மொழியிரைத் தோன்றிச் செய்யுட் டொடர்வயின் மெய்பெற நிலையும் வேற்றுமை குறித்த பொருள்வயி னான். இது, லகார னகார ஈற்றுச் செய்யுள் முடிபு கூறுகின்றது. (STP) (எ) இ-ள்:-லன எனவரும் புள்ளி இறுதி முன் - லன என்று சொல்ல வருகின்ற புள்ளியீற்றுச் சொல்முன், உம்மும் கெழுவும் உளப்பட பிறவும் - உம் என்னும் சாரி யையும் கெழு என்னும் சாரியையும் உளப்படப் பிற சாரியையும், அன்ன மரபின் மொழியிடைத்தோன்றி செய்யுள் தொடர்வயின் மெய் பெற நிலையும் - அப் பெற்றிப் பட்ட மரபினையுடைய மொழியிடைத் தோன்றிச் செய்யுள் மொழிகளைத் தொடர்ந்து சொல்லும் இடத்து மெய்மைபெற நிலைபெற்று முடியும். வேற்றுமை குறித்த பொருள் வயின் - வேற்றுமை குறித்த பொருட்புணர்ச்சிக்கண். உம்:வானவரி வில்லுந் திங்களும், கல்கெழு கானவர் நல்குறு மகளே" எனவும்; "வாதிதிக் கிழவனும் பொன்ம்" எனவும்; "கான்கெழுதாடு" எனவும் வரும். "மொழியிடைத் தோன்றி' என்ற மிகையால், பிற மற்றுள்ளும் இச்சாரியைபெற்று முடிவன கொன்ற. அதைகெழு மாந்தை, வளங்கெழு திருங்கர் எனவரும். 'அன்னமாபின்' என்றதனால், சாரியை காரணமாக வல்லெழுத்துப் பெறுதலும், அது காரணமாக நிலைமொழியீறு திரிதலும், சாரியையது உகரக்கேடும், எகா நீட்சியும் கொள்க. பூக்கேழூரன், வளங்கேழ்திருநகர் என்று அவ்வாறு வந்தமை யறிக. 'மெய் பெற' என்றதனான், இச்சாரியைப் பேற்றின்கண் ஈற்று வல்லெழுத்து வீழ்க்க. ('ஆன்' இடைச்சொல். அகரம் சாரியை.] (எது)