பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கூடு தொல்காப்பியம் இளம்பூாணம் வருகிளவியும் அன்மயிற் புணர்க்கப்படாதாயிற்று. இது தானே ஓரொன்றாகக்கொடு என்புழிப் புணர்க்கப்படும். "பிறவும் என்றதனான் முடியாதன உண்டான், கரியன் என்பன. இவை உண் எனவும் கருமை எனவும் பிரித்து நிறுத்திய வழி ஆனும் அன்னும் குறித்துவருகிளவி யன்மையான் வந்து புணராமையின், புணர்க்கப்படாவாயின. "தோன்றி' என்றதனால், கொள்ளெனக்கொண்டான் என்புழிக் கொள்ளென் பதனை என என்பதனோடு புணர்க்கப்படாமைகொள்க, 'மெய் ஒருங்கியலும்' என்றதனான், உண்டான் என்புழிச்செய்கையும் காலமும் யாலும் தோற்றிநிற்குமாறு பிரித்துப் புணர்க்கப்படாமை கொள்க. (அகரச் சுட்டின் நீட்டம் செய்யுள் விகாரம்). சஅங. கிளந்த வல்ல செய்யுளுட் டிரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிகவும் விளம்பிய வியற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியன் மருங்கி னுணந்தன ரொழுக்கல் நன்மதி நாட்டத் தென்மனார் புலவர். இஃது, இவ்வதிகாரப் புறனடையுணர்த்துதல் நுதலிற்று. (aran) இ-ள்:-கிளந்த அல்ல செய்யுளுள் திரிகவும் - முன் எடுத்தோதினை அல்லாதன செய்யுளிடத்து வேறுபட வருவனவற்றையும், வழங்கு இயல் மருங்கின் மருவொடுதிரி நவும் - வழக்கு நடத்துமிடத்து மருவுதலோடு வேறுபட வருவனவற்றையும், விளம்பிய இயற்கையின் வேறுபடத்தோன்றின் முன் சொன்ன முடிபியற்கையின் வேறு படத்தோன்றின், நல்மதி நாட்டத்து வழங்கு இயல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல்- நல்லறிவினது ஆராய்ச்சியான் வழங்கு இயலுமிடத்து அவற்றின் முடிபு வேறுபாடுகளை யறிந்து நடத்துக, என்மனார் புலவர் - என்று சொல்லுவர் புலவர். - உ-ம்:- நறவங்கண்ணி, கள்ளியங் கோடு, புன்னையங்கானல், பொன் னந்திகிரி, ஆரங் கண்ணி, காலம் பெருந்துறை என இவை வேற்றுமைக்கண் அம்முப் பெற்று முடிந்தன. "வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நாலிசை" என்பது ரகர வீறு அத்துப் பெற்று முடிந்தது. முளவுமா, பிணவுநாய் என்பன அல்வழிக்கண் மென்கணத்துக் குறியதன் இறுதிச் சினைகெட்டு உகரம்பெற்று முடிந்தன. "அஞ்செவி நிறைய மங்திரங் கூறி" என்பது அகம் என்னும் நிலைமொழி செவி என்னும் வருமொழியோடு வேறுபட முடிந்தது. ஆயிடை' என்பது அவ்வென்னும் வகரவீறு வேறுபடமுடிந்தது. தடவுத்திரை, தடவுத்தோள், என்பன உரிச்சொல் முடிபு. அருமருந் தன்னான் எனற்பாலது அருமருந்தான் என மரூஉவாய் முடிந்தது. சோணாடு மலாடு என்பதும் அது. பொதியி லென்பதும்அது. பிறவும் அன்ன. (உணர்ந்தனர் என்பது இறந்தகால வினையெச்சம்.) ஒன்பதாவது குற்றியலுகரப் புணரியல் முற்றிற்று. எழுத்ததிகாரம் இளம்பூரணருரை முற்றப்பெற்றது. (எஎ)