பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் நூன்மாபு, கக இ-ள்:- எகர ஒகரத்து இயற்கையும் அற்று-எகர ஒகரங்களது இயல்பும் அவ் வாறு புள்ளிபெறும் இயல்பிற்று. (ஏகர் ஓகாரங்களது இயல்பு அப்புள்ளி பெறா இயல்பித்து.] [எாரம் சற்தசை] உ-ம். எ,ஒ. கஎ. புள்ளி யில்லா வெல்லா மெய்யும் உருவுரு வாகி யகரமோ டுயிர்த்தலும் ளை ஆயிசே டுருவுதிரிந் தயிர்த்தலும் அஜீசியா யுயிர்த்த வாதே, இஃது, உயிரும் மெய்யும் கூடுமாறு உணர்த்தல் நுதலிற்று. (ககூ) இ-ள் :-எல்லா மெய்யும் புள்ளி இல்லாக - எல்லா மெய்களும் புள்ளி இல்லை யாம்படியாக, உருவு உருவு ஆகி - தத்தம் முன்னைவடிவே இன்னும் வடிவாக, அகரமோடு உயிர்த்தலும் - அகரத்தோடு கூடி ஒலித்தலும், ஏனை உயிரொடு உருவு திரிந்து உயிர்த்தலும்-ஒழிந்த உயிர்களோடு வடிவு வேறுபட்டு ஒலித்தலுமா கிய, அ ஈர் இயல -அவ்விரண்டு இயல்பினையுடைய, உயிர்த்தல் ஆறு -அவை ஒலிக்கு. முறைமை. "தன்னின முடித்தல்" என்பதனான், அளபெடை உயிரோடும் சார்பிற்றோற் றத்து உயிரோடும் கூடும் உயிர்மெய்யும் கொள்க. உ-ம். உருவு உருவாகி உயிர்த்தல் கங எனக் கண்டுகொள்க. உருவு திரிந்து உயிர்த்தல் கா ஙா எனக் கண்டுகொள்க. ஈண்டு உயிரும் மெய்யும் கூடுகின்ற உயிர்மெய்க்கூட்டத்தினை, எல்லா மெய்யுமென்று மெய்மேல் வைத்துக் கூறியது, அது முன்கூறிக் கூறப்படுதல் நோக்கிப் போலும். உயிர்மெய் யென்பதனை, ஒற்றுமைகொள்வுழி உம்மைத் தொலைப் புறத்துப்பிதர்த. அன்மொழித்தொகை யெனவும், வேற்றுமை கொள்வுழி உம்மைத்தொகையெனவும் கொள்க. 'இல்லாக' என்பது 'இல்லா' என் நின்றது. உருவு திரிந்து உயிர்த்தல் மேலும் கீழும் விலங்கு பெறு வன விலங்கு பெற்று உயிர்த்தலும், கோடுபெறுவன கோடுபெற்று உயிர்த்த லும், புள்ளிபெறுவன புள்ளிபெற்று உயிர்த்தலும், புள்ளியும் கோடும் உடன் பெறுவன புள்ளியும் கோடும் உடன்பெற்று உயிர்த்தலும் எனக்கொள்க. கஅ. மெய்யின் வழிய துயிர்தோன் நிலையே. (கஎ) இது, உயிர்மெய்யுள் உயிரும் மெய்யும் நிற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இள் :-உயிர்-உயிர், மெய்யின் வழியது - மெய்களின் பின்னவாம், தோன்றும் நிலை-உயிர்கள் தோன்றும் நிலைமைக்கண். 'தோன்று நிலை' என்றதனான். உயிர்மெய்களைப் பிரிக்குமிடத்தும் கூட்டுமிடத் தும், அவ்வாறே முன்னும் பின்னும் ஆதலைக் கொள்க. மெய்யும் உயிரும் முன்னும் பின்னும் பெறநிற்குமென்றமையால், அக்கூட்டம் பாலும் நீரும்போல உடன் கலந்ததன்றி, விரல் நுனிகள் தலைப்பெய்தாற்போல வேறுநின்று கலந்தனவல்ல என்பது பெறுதும். ஈண்டு வேற்றுமைநயம் கருதப்பட்டது. (ஏ-ஈற்றசை.) (கச) ககூ. வல்லெழுத் தென்ப கசட தபற. இது, தனிமெய்களுள் சிலவற்றிற்கு வேறு ஓர் குறியிடுதல் நுதலிற்று.