பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கஉ தொல்காப்பியம் இளம்பூரணம் இ-ள்:- வல்லெழுத்து என்ப- வல்லெழுத்து என்னும் குறியஎன்று சொல் லுவர், கசடதபறகசடதபற என்னும் தனிமெய்களை வல்லென்று இசைத்தலானும், வல் என்ற தலைவளியாற் பிறத்தலானும் வல்லெழுத்து எனப்பட்டது. மொழிக்கு முதலாமெழுத்து நான்கு உளவாகலா னும், அவற்றால் வழக்குப்பயிற்சி பெரிதாகலானும் [வல்லினம்] முன்கூறப்பட் டது. [கசடதபற என்னும் தனிமெய்கள் க்ச்ட்த்ப்ற்] (கக) உய. மெல்லெழுத் தென்ப ஙஞணநமன. இதுவும் அது. இள் : மெல்லெழுத்து என்ப - மெல்லெழுத்து என்னும் குறிய என்று சொல்லுவர், ஙஞணநமன-ஙஞணநமன என்னும் தனிமெய்களை னும், மெல்லென்று இசைத்தலானும், மெல் என்ற மூக்கின்வளியாற் பிறத்தலா மெல்லெழுத்து எனப்பட்டன. மொழிக்கு உளவாகலானும் அவற்றின் வழக்குப்பயிற்சியானும் முதலாமெழுத்து மூன்று [மெல்லினம்], முதலா மெழுத்துச் சிறுபான்மை வழக்கினவாய் இரண்டாகிய இடையினத்தின்முன் வைக் கப்பட்டது. வன்மை மென்மை கூறலின், எழுத்து அருவன்றி உருவாதல் பெறப் பட்டது. உயிருக்கும் குறுமை நெடுமை கூறலின், உருவென்பது பெறுதும். [ஙஞணநமன என்னும் தனிமெய்கள் ங்ஞ்ண்ந்ம்ன்.) உச. இடையெழுத் தென்ப யரள வழள. இதுவும் அது. (உய) இ-ள் இடையெழுத்து என்ப - இடையெழுத்து என்னும் குறிய என்று சொல்லுவர், யரலவழள-யரலவழள என்னும் தனிமெய்களை இடைநிகரவாகி ஒலித்தலானும், இடைநிகர்த்தாய மிடற்றுவளியாற் பிறத்த லானும் இடையெழுத்து எனப்பட்டது. (யால வழள என்னும் தனிமெய்கள் ய்ால்வ்ழ்ள்.] உஉ. அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின் மெய்ம்மயக் குடனிலை தெரியுங்காலை (உக) இது, தனிமெய் மயக்கத்திற்குப் பெயரும்| முறையும் தொகையும் உணர்த்து தல் நுதலிற்று. இ-ள் :- அ மூ ஆறும்-மேற்சொல்லப்பட்ட (மூலாறு) பதினெட்டு மெய்யும், வழங்கு இயல் மருங்கின் - தம்மை மொழிப்படுத்தி வழங்கும் இயல்பு உளதா மிடத்து, மெய்மயக்கு -மெய் மயக்கம் என்றும், உடன்நிலை-உடனிலை மயக்கம் என்றும் இருவகைய, தெரியும் காலை-(அவை மயங்கு முறைமை) ஆராயும் காலத்து. உறழ வரையறை உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூன்றனையும் உறழ்ச்சிவகையான் ஒன்பது உளவாமன்றே, அவற்றுள் தனிமெய்யோடு தனிமெய் மயக்கம் ஒன்றே கூறிய தென்னெனின், மற்றவற்றிற்கு வரையறை யின்மையின், யுடைய தனிமெய்மயக்கமே கூறியொழிந்தார் தனால், தனிமெய்யோடு உயிர்மெய் மயக்கமன்றி, மயக்கமாதல் கொள்க. என உணர்க. மெய் என்ற தனிமெய்யோடு தனிமெய் (உஉ)