________________
எழுத்ததிகாரம் - மொழிமரபு கஎ இ-ள்- நெட்டெழுத்து இம்பரும் நெட்டெழுத்தினது பின்னும், தொடர் மொழி ஈற்றும்- தொடர்மொழியது இறுதியினும், குற்றியலுகரம் வல்லாறு ஊர்ந்து (நிற்றல் வேண்டும்) - குற்றிய லுகரம் வல்லெழுத்து ஆறினையும் ஊர்ந்து (நிற் றலை வேண்டும் ஆசிரியன்). "தந்துபுணர்ந்துரைத்தல்" [மரபு-ளய] என்னும் தந்திரவுத்தியான், முன்னின்ற 'நிற்றல் வேண்டும்' என்பது ஈண்டும் புணர்க்கப்பட்டது. உ-ம். நாகு, வாகு என வரும். நெட்டெழுத்திம்பரும் தொடர்மொழியீறும் இடம். வல்லெழுத்துப் பற்றுக் கோடு. இவ்வாறு இடமும் பற்றுக்கோடும் கூறவே, மொழிக்கு ஈறாதலும் கூறி யவா றாயிற்று. கூஎ. இடைப்படிற் குறுகு மிடனு மாருண்டே கடப்பா டறிந்த புணரிய லான. இது, குற்றியலுகரம் புணர்மொழியுள்ளும் வருமென்பது உணர்த்துதல் இதலிந்து இ-ள் :-இடைப்படினும் குறுகும் ன் உண்டு -(அவ்வுகரம்) புணர்மொழி இடைப்படினும் குறுகும் இடமுண்டு. (அதன் இடமும் பற்றுக்கோடும் யாண்டோ பெறுவதெனின்) கடப்பாடு அறிந்த புணரியலான் - அதன் புணர்ச்சிமுறைமை அறி யும் குற்றியலுகரப்புணரியலின்கண்ணே. 'இடைப்படினும் குறுகும்' என மொழிமாற்றி உரைக்க. அக்குற்றியலுகரப் புணரியலுள் "வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித், தொல்லை வியற்கை சியாறு குரித்தே" (குற்றியலுகரப் புணரியல்] என்பதல் லொற்றுத்தொடர்மொழியும் வல்லெழுத்துவருவழியும் இடம். அல்வல்லொற் றுத்தொடர்மொழியீற்று வவ்லெழுத்துப் பற்றுக்கோடு. உ-ம். செக்குக்கணை, சுக்குக்கோடு எனவரும். 'இடன்' என்றதனான், இக்குறுக்கம் சிறுபான்மை என்றுணர்க. [ஆர்,ஏ என்பன அசைகள். 'புணரியலான்' என்பது வேற்றுமை மயக்கம். அகரம் சாரியை.) (ச) கூகுதிமுதன் முன்ன ராய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே. இஃது ஒருமொழி ஆய்தம் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- ஆய்தப் புள்ளி - ஆய்தமாகிய புள்ளி, குறியதன் முன்னர்- குற்றெழுத் தின் முன்னர், உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்து-உயிரொடுபுணர்ந்த வல் லெழுத்து ஆறன் மேலது. உ-ம். எஃகு, கஃசு எனவரும். குறியதன்முன்னரும் வல்லெழுத்துமிசையும் இடம். இஃது உயிரன்மையின், இதற்குப் பற்றுக்கோடு என்பதில்லை. கஃறீது என்பதனை மெய்பிறிதாகிய புணர்ச்சி [புணரியல்-எ] என்ப வாகலின், 'புள்ளி' என்றதனான் ஆய்தத்தை மெய்ப் பாற் படுத்துக்கொள்க. ஈண்டும் உயிரென்றது, மேல் 'ஆய்தத்தொடர் மொழி" (ரூற்றியலுகரப் புணரியல்-] என்னேதலின் பெரும்பான்னேமயும் குற்றியகரத் தினை, வெஃகாமை முதலிய பிற உயிர் வரவு சிறுபான்மை யெனக்கொள்க. (ரு) 3