பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாமம் மொழிமரபு உரு இ-ள் :-சகர கிளவியும் அவற்று ஓர் அற்று-சகரமாகிய எழுத்தும் மேற் சொல்லப்பட்டவைபோல எல்லா உயிரோடும் மொழிக்கு முதலாம், அ ஐ ஒள எனும் மூன்று அலங்கடை-அ ஐ ஒள என்னும் மூன்றும் அல்லாவிடத்து. உ-ம். சாலை சிலை சீறுக சுரும்பு சூழ்க செய்கை சேலடி சொறிக சோறு என வரும். சகடம் எனவும், சையம் எனவும் விலக்கினவும் வருமாலெனின், அவற்றுள் ஆரியச்சிதை வல்லாதன "கடிசொல் லில்லை" என்பதனாற் கொள்க. [ஏகாரம் இரண் டும் ஈற்றசைகள். இந்நூல் மூலத்தில் 'ஓர் அன்ன,ஓர் அற்று' என்று வரும் இடங்களில் 'ஓர்' என்பதனை அசையென்று கொள்ளுதல் பொருத்தமுடையதா கத் தோன்றுகின்றது.) கங. உ ஊ ஒ ஒ வென்னு நான்குயிர் வ என் னெழுத்தொடு வருத வில்லை. இதுவும் அது. பிடிக்கும (உக) இ-ள் :--உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர்-உ ஊஒ ஓ என்று சொல்லப் படுகின்ற நான்கு உயிரும், வ என் எழுத்தோடு வருதல் இல்லை-வ என்னும் மெய் யெழுத்தோடு மொழிமுதலில் வருதலில்லை. பிற உயிர்கள் வரும். உம். வளை வாளி விளரி வீடு வெள்ளி வேர் வையம் வெளவு எனவரும். (ஙய) சுச. ஆ எ இதுவும் அது. ஒ எனு மூவுயிர் ஞகாரத் துரிய இ-ள் :-ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய-ஆ எ ஒ என்று சொல் லப்படும் மூவுயிர்கள் ஞகார ஒற்றோடு முதலாவதற்கு உரிய. பிற உயிர் உரியவல்ல. உ-ம். ஞாலம் ஞெகிழி ஞொள்கிற்று எனவரும். ஞழியிற்று என்றாற்போல்வன விலக்கினவும் வருமாலெனின், அவை அழி வழக்கென்று மறுக்க. கூரு.ஆ ஆவோ டல்லது யகரமுத லாது. இதுவும் அது. (15) இ-ள் :-ஆவோடு அல்லது யகரம் முதலாது - ஆகாரத்தோடு அல்லது யகா முதலாகாது. உம். யான் எனவரும். யவனர் என்றாற்போல்வன விலக்கினவும் வருமாலெனின், அவை சிதைவென்று மறுக்க. ச. முதலா வேன தம்பெயர் முதலும். ஆரியச் (me) இது, மொழிக்கு முதலாகாதனவும் ஒரோவழி ஆமாறு உணர்த்துதல் நுத லிற்று. 4