________________
உ தொல்காப்பியம். இளம்பூரணம். பதிப்புரை. தொல்காப்பியம்" என்னும் இந்நாள் தமிழ் மொழிக்குத் தலையாக விளக்கும் ஒப்புயர்வற்ற ஓர் இலக்கணம். இந்து அகத்தியனது பன்னிரு மாணக் கருள் "திரணதூமாக்கினி" என்னும் இயற்பெயரிலையும் "போருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர். நல்லிசை நிறுத்த தொல்காப்பியன் என்னும் புகழ்ப்பெயரினையும் கொண்டு விளங்கிய ஓர் முனிகளுள் இயத்தப்பெத்தது. இகற்கு முதல் தால் அகத்தியனால் இயத்தப்பெத்த "அகத்தியம்" என்ப. இந்தால் பன்னீராயிரம் வருஷம்களுக்குமுன் இயற்றப்பெற்றதென வீரசோழியத்தின் பதிப்புரையில் திருமன். சி.வை. தாமோதரம்பிள்ளை கிகைாட்டியுள்ளனர். ஆண், பெண், அலிகளை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் விகுதிக ளால் உணர்த்துவது தமிழ்மொழி ஒன்றே. ஆண்பால் விகுதியைப் பொருந்தி ஆணைக்குறியாமலும், பெண்பால் விகுதியைப் பொருந்திப் பெண்ணைக் குறியா மலும், ஒன்றன்பால் விகுதியைப் பொருந்தி அலியைக் குறியாமலும் நிற்கும்சொற் கள் ஆரியம் முதலிய மொழிகளில் எண்ணில உண்டு. உயர்திணை, அஃறிணை என்னும் தமிழ் இலக்கணப் பாகுபாடு ஆரியம் முதலியனத்தில் இஸ்லே. நிலத்தின் பாகுபாடுகளையும், அவற்றின் உரிப்பொருள், கருப்பொருள்களையும், அவற்றின் மக்களது ஒழுக்கங்களையும் கூறுவது தமிழ் இலக்கணம் ஒன்றே. இவ்வகைத் தனிச் சிறப்புப்பொருந்திய இத்தமிழ் இலக்கணத்துள்ளும் ஆரிய மொழிகள் சிலவற்றையும், ஆரியர் பழக்க வழக்கங்கள் சிலவற்றையும், ஆரியர் கொள்கைகள் சிலவற்றையும், இந்நூலாசிரியன் நுழைத்திருத்தலை ஆங்காங் குக் காணலாம். ஆயினும், தமிழ் மக்களின் முற்காலப் பழக்க வழக்க ஒழுக்கம் களும், தமிழ் மொழியின் கேர்மையும் மாண்பும் ஏற்தமும் இந்நூலின்கண் தெற் றெனக் காணகாகும். இந்தாவின் எழுத்ததிகாரச் சொல்லதிகாரச் சூத்திரங்களைக் கற்போர் நன்னூலாதியவற்றைப் புன்னூலாதியனவாகக் காண்பரென்பது திண்ணம். இந்துற்கு உரை எழுதினோர் இலம்பூரணர், கல்லாடர், பேச்ாசிரியர் கச்சினார்க்கினியர், சேனுவசையச் என்னும் ஐவர். அவருள் இளம்பூானாரும், பேராசிரியரும் இந்நூலின் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்