பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்றாவது பிறப்பியல் இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், எழுத்துக்களது பிறப்பு உணர் தினமையின் பிறப்பியல் என்னும் பெயர்த்து. இதனை நூன்மரபின் பின்னே வைக்கவெனின், சார்ற்னேற்றத்தெழுக்கும் தனிமெய்யும் மொழிமாயிடை உணர்த்தி [ப் பிறப்பு] உணர்த்த வேண்டுதலின், மொழிமரபின் பின்ன தாயிற்று. அங. உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇ பல்லு மிதழு நாவு மூக்கும் அண்ணமு முளப்பட வெண்டு முறை உறுப்புற் றமைய நெறிப்பட நாடி நிலையான் எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப் பிறப்பி னாக்கம் வேறுவே றியல திறப்படத் தெரியுங் காட்சி யான. இத் தலைச்சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், எழுத்துக்களது பொதுப் பிறப்பு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:-எல்லா எழுத்தும் நெறிப்பட நாடி சொல்லும் காலை - தமிழெழுத்துக் களெல்லாம் ஒருவன் முறைப்பட ஆராய்ந்து தம்மைச் சொல்லுங்காலத்து, உந்தி முதலா முந்து வளி தோன்றி-கொப்பூழ் அடியாக மேலே கிளர்கின்ற உதா னன் என்னும் பெயரையுடைய வாயுத் தோன்றி, தலையினும் மிடற்றினும் நெஞ்சி னும் நிலைஇ - தலையின்கண்ணும் மிடற்றின்கண்ணும் நெஞ்சின்கண்ணும் நிலைபெ ற்று, பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலை யான் உறுப்பு உற்று அமைய -(தலையும் மிடறும் நெஞ்சும் என்னும் மூன்றனோடும்) பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எட்டாகிய முறைமையை யுடைய இடங்களில் ஓர் உறுப்போடு ஓர் உறுப்புத் தம்மிற்பொருந்தி அமைதி பெற, பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல-பிறப்பினது ஆக்கம் வேறு வேறு புலப்பட்டு வழங்கு தனுடைய, திறப்படத் தெரியும் காட்சியான்-கூறுபாடுளதாக ஆராயும் அறிவிடத்து. இதழ்போறலான் வாய் இதழெனப்பட்டது. எல்லா எழுத்தும் என்னும் எழுவாய்க்குப் 'பிறப்பினாக்கம் வேறுவேறு இயல' என்பதனை ஒரு சொன்னீர்மைப் படுத்திப் பயனிலை யாக்குக. ('முதலாக' என்பது ஈறு கெட்டு நின்றது. ஈற்ற கரம் சாரியை.] அச. அவ்வழிப் பன்னீ ருயிருந் தந்நிலை திரியா மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும். இஃது, உயிரெழுத்திற்குப் பொதுப்பிறப்பு உணர்த்துதல் நுதலிற்று. (க)