பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கூஅ தொல்காப்பியம் - இளம்பூரணம் இ-ள் :-உயிர் இறு சொல் முன் உயிர் வரு வழியும்- உயிரீற்றுச் சொல்முன் உயிர்முதல் மொழி வரும் இடமும், உயிர் இறு சொல்முன் மெய் வரு வழியும்-உயி ரீற்றுச்சொல்முன் மெய்முதல் மொழிவரும் இடமும், மெய் இது சொல்முன் உயிர் வரு வழியும் மெய்யீற்றுச் சொல்முன் உயிர்முதல் மொழி வரும் இடமும், மெய் இறு சொல்முன் மெய் வரு வழியும்-மெய்யீற்றுச்சொல்முன் மெய்முதல் மொழி வரும் இடமும், இவ் என அறிய-(அப்புணர்ச்சிவகை) இவையென அறிய, கிளக்கும் காலை- ஆசிரியர் சொல்லுங்காலத்து, நிறுத்த சொல் குறித்துவரு கிளவி என்று அ ஈர் இயல அவை நிறுத்த சொல்லும் அதன் பொருண்மையைக் குறித்துவரும் சொல்லு மாகிய அவ்விரண்டு இயல்பையுடைய, புணர்நிலைச் சுட்டு புணரும் கிலைமைக்கண். ஆ ஈ, ஆ வலிது, ஆல் இலை, ஆல் வீழ்ந்தது எனக் கண்டுகொள்க. விளவினைக் குறைத்தான் என்பது அவ்வுருபுகுறித்து வருகிளவியை நிலைமொழி யுள் அடக்கி இருமொழிப்புணர்ச்சியாய் நின்றவாறு அறிக. [அவ்வுருபு - விளவினை' என்பதன் ஐ உருபு. முதல் ஏகாரம் பிரிநிலை. இரண் டாம் ஏகாரம் ஈற்றசை. 'என்று' இரண்டும் எண்ணிடைச்சொல்.] ளக. அவற்றுள் நிறுத்த சொல்லி னீரு கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலுந் தொழிலொடு பெயரைப் புணர்க்கும் காலுஞ் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிட னொன்றே யியல்பென ஆங்கந் நான்கே மொழிபுண ரியல்பே. (®) இது, மேற்கூறும் புணர்ச்சி புணர்ச்சிவலையான் தான்கா மென்பதாடம், சொல் வகையான் கான்காமென்பதும், புணர்வது சொல்லும் சொல்லுமேயன்றி, எழுத் தும் எழுத்துமே யென்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : அவற்றுள்-நிலைமொழி வருமொழி யெனப்பட்டவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறு ஆகு எழுத்தொடு குபித்து வரு கிளவி முதல் எழுத்து இயைய நிறுத்த சொல்லினது ஈனுகின்ற எழுத்தினோடு அதளைக்குறித்து வருகின்ற சொல் லினது முதலெழுத்துப் பொருந்த, பெயரொடு பெயரை புணர்க்கும் காலும்-பெயர்ச் சொல்லொரு பெயர்ச்சொல்வைப் புணர்க்கும் காலத்தும், பெயரொடு தொழிலை புணர்க்கும் காலும் பெயர்ச்சொல்லொடு வினைச்சொல்லைப் புணர்க்கும் காலத்தும், தொழிலொடு பெயரை புணர்க்கும் காலும்-வினைச்சொல்லொடு பெயர்ச்சொல்லைப் புணர்க்கும்காவத்தும், தொழிலொடு தொழிவே புணர்க்கும் காலும்-வினைச்சொல் லொடு வினைச்சொல்லைப் புணர்க்கும் காலத்தும், திரிபு மூன்று இயல்பு ஒன்று என அ நான்கே மொழிபுணர் இயல்பு- திரியும் இடம் மூன்றும் இயல்பு ஒன்றும் ஆகிய அந் நான்கே மொழிகள் தம்மிற் புணரும் இயல்பு. உம் சாத்தன் கை, சாத்தன் உண்டான், வந்தான் சாத்தான், வந்தான் போயி னான் எனக் கண்டுகொள்க.