________________
எழுத்ததிகாரம் - புணரியல். சக இ-ள்:-ஐ ஒடு கு இன் அது கண் என்னும்-ஐ ஒடு கு இன் அது கண் என்று சொல்லப்படும், அ ஆறு என்ப வேற்றுமை உருபு- அவ்வாறும் என்று சொல்லுவர் வேற்றுமை புருபுகளை. இவ்வாறும் அல்லன வெல்லாம் அல்வழி எனப்படும். அவை எழுவாயும், விளியும், உவமத்தொகையும், உம்மைத்தொகையும், பண்புத்தொகையும், இருபெய ரொட்டுப் பண்புத்தொகையும், முற்றும், இருவகை எச்சமும், இடையும், உரியும் என இவை. (கக) எகடு, வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருபில் கொல்வழி யொற்றிடை மிகுதல் வேண்டும். இது, நான்காவதற்கும் ஏழாவதற்கும் உருபியலை நோக்கிற்றோர் கருவி உணர்த் துதல் நுதலிற்று. இ-ள்:- வல்லெழுத்து முதலிய வேற்றுமை உருபிற்கு-வல்லெழுத்து முத லாகவுடைய வேற்றுமை யுருபிற்கு, ஒல்வழி ஒற்று இடை மிகுதல் வேண்டும். பொருந்தின இடத்து வல்லொற்றாயினும் மெல்லொற்றாயினும் இடைக்கண் மிகுதல் வேண்டும். ஊர்க்கு, நீர்க்கு, ஊர்க்கண், நீர்க்கண் என வல்லெழுத்து மிக்கன. தங்கண், எங்கண் என மெல்லெழுத்து மிக்கன. 'ஒல்வழி' என்றதனால், அரசர்கண், பார்ப்பார்கண் என ஒற்று மிகாதனவும் கொள்க. "மெய்பிறிதாதல்' [புணரியல் - எ] முதலாய நான்கு புணர்ச்சியும் உருபு புணர்ச்சிக்கண்ணும் எய்தலின், மெய்பிறிதாதலை எடுத்தோதாது மிக்கதனை எடுத் தோதிய வதனான், மிக்க புணர்ச்சி யல்லனவும் ஈண்டே கொள்க. பொற்கு, பொற் கண், ஆங்கண், ஈங்கண், ஊங்கண், அவற்கு, இவற்கு, அங்கண், கொற்றங்கு, சாத்தற்கு எனவரும். அவன்கண், சாத்தன்கண் என்புழி இயல்பும் இதனானே கொள்க. பிளக்க ஆறனுருபி னகரக் கிளவி ஈறா ககரமுனைக் கெடுதல் வேண்டும். (கஉ) இஃது, ஆராவதற்குத் தொகைமாபினை நோக்கியதோர் கருவி கூறுதல் நுத விற்று இ-ள்:- ஆறன் உருபின் அகரக்கிளவி - ஆறாம் வேற்றுமையாகிய அது என் னும் சொல்லிடத்து அகரமாகிய எழுத்து, ஈறு ஆகு அகரமுனை கெடுதல் வேண்டும்- (நெடுமுதல் குறுகும்) மொழியீற்று உளதாகின்ற அகரத்தின்முன்னர்த் தான் கெடு தல் வேண்டும். உம். நமது, எமது, தனது, எனது, நினது எனவரும். மேல் ஈறாகு அகரம் இதற்குத் தாராது, இவ்வுருபகரமே ஏறி முடிய அமைத லின், அது கேடாதல் வேண்டா எனின், நெடுமுதல் குறுகி விகாரப்பட்டு நின்ற மொழியாகலின் அதன்மேல் உருபகரமேறி முடியல் வேண்டா ராயினார் போலு மென்பது. ளக எ . வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே. இது, வேற்றுமையுருபு பெயர்க்கண் நிற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. 6