பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சச தொல்காப்பியம் - இளம்பூரணம். இது கூறவேண்டா எனின், சுட்டு முதல் ஐ ஈற்றுச் சொல்லின் ஐமுன் என ஓதாது, 'சுட்டு முதல் ஐம்முன்' என அச்சொல்முன் எல்லாம் கெடுவதுபோல ஒதி னமையின், வேண்டிற்றென்பது. ள உச. னஃகான் றஃகா னான்க னுருபிற்கு. இது, னகாவீற்றுச் சாரியை நான்கற்கும் ஈறு திரிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:- நான்கன் உருபிற்கு னஃகான் றஃகான் - நான்காம்; உருபிற்கு(னகார வீற்றுச் சாரியையெல்லாம்)னகாரம் றகாரமாம். உ-ம். விளவிற்கு, கோஒற்கு, ஒருபாற்கு, அதற்கு எனவரும், ள உரு. ஆனி னகரமு மதனோ ரற்றே காண்முன் வரூஉம் வன்முதற் றொழிற்கே. (உக) இஃது, ஆன்சாரியை பொருட்புணர்ச்சிக்கண் ஈறு திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:-நாள்முன் வரும் வல் முதல் தொழிற்கு ஆனின் அகரமும் - நாட்பெயர் முன்னர் வரும் வல்லெழுத்தை முதலாகவுடைய வினைச்சொற்கண்வரும் ஆன்சாரி யையின் அகரமும், அதன் ஓர் அற்று-அந்நான்கனுருபின்கண் வரும் ஆன்சாரியை யோடு ஒரு தன்மைத்தாய் னகாரம் றகாரமாம். 'தொழிற்கு' என்பதனைத் 'தொழிற்கண்' என மயக்கமாகக் கொள்க. உ-ம். பரணியாற் கொண்டான் எனவரும். உம்மையை இரண்டுற மொழிதலானே எதிரது தழீஇய தாக்கி, அதனான் நாளல்லவற்றுமுன் வரும் வன்முதற் றொழிற்கண் இன்னின் னகரமும் நகாரமாய்த் திரிதல் கொள்க. பனியிற் கொண்டான் எனவரும். தொழிற்கண் இன்னின் னகரம் திரியுமென, பெயர்க்கண் இன்னின் னகரம் திரிதலும் திரியாமையுமுடைய வென்பது ஞாபகத்தாற் கொள்ளப்படும். பறம்பிற் பாரி, வண்டின் கால் எனவரும். ளஉசு. அத்தி னகர மகரமுனை யில்லை. இஃது, அத்து முதல் திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (உஉ) இ-ள்:- அத்தின் அகரம் அகரமுனை இல்லை-அத்துச்சாரியையின் அகரம் அகரவீற்றுச்சொல்முன்னர் இல்லையாகும். உ-ம். மகத்துக்கை எனவரும். ள உ எ . இக்கி னிகர மிகரமுனை யற்றே. இஃது, இக்குச்சாரியை முதல் திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (உங) இ-ள்:- இக்கின் இகரம் இகரமுனை அற்று-இக்குச்சாரியையினது இகரம் இகரவீற்றுச்சொல்முன்னர் மேற்கூறியவாறுபோலக் கெடும். உ-ம். ஆடிக்குக் கொண்டான் எனவரும். (உச)