பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஐந்தாவது - தோகைமரபு- இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், மேல் அகத்தோத்தினுள் இரு பத்துநான்கு ஈற்றினும் விரிந்து முடிவனவற்றையெல்லாம் தொகுத்துமுடித்தலின் தொகைமரபு எனப்பட்டது. மேல் புணரியலுட் கூறிய கருவிகளாற் செய்கை கூறும் வழி, தொக்குப்புணருஞ்செய்கை கூறலிற் புணரியலோடு இயைபுடைத்தாயிற்று. ளசச. கசதப முதலிய மொழிமேற் றோன்று மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான் ஙஞநம வென்னு மொற்றா கும்மே அன்ன மரபின் மொழிவயி னான. இத்தலைச்சூத்திரம் என் நுதலிற்றோவெனின். அல்வழியும் வேற்றுமையுமாகிய இருவகைக்கண்ணும், உயிர்மயங்கியலையும் புள்ளிமயங்கியலையும் நோக்கியதோர் வருமொழிக்கருவி கூறுதல் நுதலிற்று. இ-ள்:-கசதப முதலிய மொழிமேல் தொன்றும் மெல்லெழுத்து இயற்கை உயிரீற்றினும் புள்ளியீற்றினும் இருவழியும் க ச த பக்களை முதலாகவுடைய மொழி களின்மேல் தோன்றும் மெல்லெழுத்தினது இயல்புகூறின், சொல்லியமுறையான் ங ஞ ந ம என்னும் ஒன்றாகும் - மெல்லெழுத்து மேற்சொல்லும் முறைமையான் க ச த ப க்களுக்கு நிரனிறை வகையானே ஙஞநம வென்னும் ஒற்றாகும், அன்ன மா மொழிவயின் ஆன் - அத்தன்மைத்தாகிய முறைமையினையுடைய மொழிகளி பின் டத்து. உ-ம். விளங்கோடு, செதிள், தோல், பூ எனவரும். தோன்றுமென்றதனால், தோன்றிநின்றனவும் அவ்வாறே திரிந்து மெல்லெழுத்தா மென்பது. மரங்குறிது, சிறிது, தீது, பெரிது எனவரும். அன்னமரபின் மொழி யன்மையின், விளக்குறுமை என்புழி மெல்லெழுத்து மிகாதாயிற்று. (ஏகாரம் ஈற்றசை. 'ஆன' என்பதன் அகரம் அசை.) ள ச ரு . ஞ நமய வவெனு முதலாகு மொழியும் உயிர்முத லாகில் மொழியு முளப்பட அன்றி யனைத்து மெல்லா வழியும் நின்ற சொன்மு னியல்பா கும்மே. (க) இஃது, இருபத்துநான்கு ஈற்றின்முன்னும், வன்கணமொழிந்த கணங்கட்கு இருவழியும் வருமொழிமுடிபு கூறுதல் நுதலிற்று. இள்:-ஞநமயவ எனும் முதல் ஆகுமொழியும்-ஞ நமயவ என்று சொல் லப்படும் முதலெழுத்து உளவாகும் மொழியும், உயிர்முதலாகிய மொழியும் உளப் பட - உயிர்முதலாகிய மொழியுமாக, அன்றி அனைத்தும் எல்லா வழியும் - அவ்வனைத்து மொழியும் அல்வழியும் வேற்றுமையாகிய எல்லாவிடத்தும், நின்ற சொல்முன் இயல்பாகும்- இருபத்துநான்கு ஈற்றுப்பெயராகிய நிலைமொழிமுன்னர் இயல்பாகி முடியும்.