பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் உருபியல் ளஎசு. சுட்டுமுத லுகர மன்னொடு சிவணி ஒட்டிய மெய்மொழித் துகால் கெடுமே இஃது, உகரவீற்றுட் சிலமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. இ-ள்:சுட்டு முதல் உகரம் அன்னொடு சிவணி-சுட்டெழுத்தினை முதலாகவு டைய உகரவீற்றுச்சொல் அன்சாரியையொடு பொருந்தி, ஒட்டிய மெய் ஒழித்து உகரம் கெடும்-தான் பொருந்திய மெய்யை ஒழித்து உகரம் கெடும். உ-ம். அதனை, அதனோடு; இதனை, இதனொடு; உதனை, உதனொடு என ஒட்டுக ளஎ எ. சுட்டுமுத லாகிய வையெ னிறுதி வற்றொடு சிவணி நிற்றலு முரித்தே. இஃது, ஐகாரவீற்றுட் சிலமொழிக்கு முடிபுகூறுதல் நுதலிற்று. இ-ள்:-சுட்டு முதலாகிய ஐ என் இறுதி-சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகாரவீற்றுச்சொல், வற்றொடு சிவணி நிற்றலும் உரித்து-வற்றுச்சாரியையொடு பொருந்தி அவ்வீற்றைகாரம் நிற்றலு முரித்து; (நில்லாமையு முரித்து). உம். அவையற்றை, அவயற்றொடு, இவையற்றை, இவையற்றொடு; உவையற்றை, உவையற்றொடு என ஒட்டுக. ஐகாரம் கெட்டவழி, நின்ற வகரத்தினை வற்றின்மிசை ஒற்றென்று கெடுத்து அவற்றை, அவற்றொடு; இவற்றை, இவற்றொடு ; உவற்றை, உவற்றோடு என ஒட்டுக மற்று இம்முடிபு சுட்டுமுதல் வகர வீற்றோடு ஒத்தமையின், ஈண்டு இது கூறல் மிகைப்படக்கூறலாம் பிற எனின், அஃது ஒக்கும்; இவ்வாறு கூறுவன மேலும் உள; இவற்றிற்கெல்லாம் ஆசிரியன் கருத்து அறிந்துகொள்ளப்படு மென்பது. அ, யாவென் வினா கி னைபெ னிறுதிதியும் இதுவும் அது. ஆரிய றிரியா தென்மனார் புலவர் ஆவயின் வகர மையொடுங் கெடுமே. (@) இ-ள்:-யா என் வினாவின் ஐ என் இறுதியும்-யா என்னும் வினாவினையுடைய ஐகார வீற்றுச்சொல்லும், அ இயல் திரியாது என்மனார் புலவர்-மேற்கூறிய சுட்டுமுதல் ஐகாரம்போல வற்றுப்பெறும் அவ்வியல்பில் திரியாதென்றுசொல்லுவர் புலவர்; வயின் வகரம் ஐயோடும் கெடும் - அவ்விடத்து வகரம் ஐகாரத்தொடுகூடக் கெடும். அ உ-ம். யாவற்றை, யாவற்றொடு என ஒட்டுக. வகரம் வற்றின்மிசை ஒற்றென்று கெடுவதனை, ஈண்டுக் கேடோதியவதனால் பிற ஐகாரமு: வற்றுப்பெறுதல் கொள்க. கரியவற்றை செய்யவற்றை எனவரும். ளஎகா.நீயெ னொருபெயர் நெடுமுதல் குறுகும் ஆவயி னகர மொற்றா கும்மே.