பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் உருபியல் கன இ-ள்:- சுட்டுமுதல் வகரம்-சுட்டெழுத்தினை முதலாகவுடைய வகாரவீற்றுச் சொல், ஐயும் மெய்யும் கெட்ட இறுதி இயல்திரிபு இன்று - ஐகாரமும் அதனாற் பற் றப்பட்ட மெய்யும் கெட்டு வற்றுப்பெற்று முடிந்த சுட்டுமுதல் ஐகாரவீற்றியல்பில் திரிபின்றி வற்றுப்பெற்று முடியும். உ-ம். அவற்றை, அவற்றொடு; இவற்றை, இவற்றொடு; உவற்றை, உவற்றொடு என ஒட்டுக. ள அ ச . ஏனை வகர மின்னொடு சிவணும், (கக) இது, வகரவீற்றுள் ஒழிந்த வகரவீற்றிற்கு முடிவுகூறுதல் நுதலிற்று. இ-ள்:- ஏனை வகரம்) இன்னொடு சிவணும் - ஒழிந்த வகரவீறு இன் சாரியை யொடு பொருந்தி முடியும். உ-ம். தெவ்வினை, தெவ்வினொடு என ஒட்டுக. மற்று இது உரிச்சொல்லன்றோவெனின், உரிச்சொல்லேயெனினும் படுத்த லோசையாற் பெயராயிற்றெனக்கொள்க. ள அரு. மஃகான் புள்ளிமு னத்தே சாரியை. இது, மகரவீறு முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (82). இ-ள் :- மஃகான் புள்ளிமுன். அத்து சாரியை-மகரமாகிய புள்ளிவீற்றுச் சொல்முன் வரும்சாரியை அத்துச் சாரியை. உ-ம். மரத்தை, மரத்தொடு எனவரும். ளஅ சு . இன்னிடை வரூஉ மொழியுமா ருளவே. (கங) இது, மகரவீற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. இ-ள்:-இன் இடைவரும் மொழியும் உள-மகரவீறு அத்துச்சாரியை யொழிப இன்சாரியை இடைவந்து முடியும் மொழிகளும் உள. உ-ம். உருமினை, உருமினொடு என ஒட்டுக. (ஆர் என்பது அசை. ஏகாரம் ஈற்றசை.) ள அ எ. நும்மெ னிறுதி யியற்யைாகும். (கச) இது, மகரவீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. இ-ள் :- நும் என் இறுதி இயற்கை ஆகும்-நும் என்னும் மகரவீறு மேற்கூறிய அத்தும் இன்னும் பெறாது இயல்பாய் முடியும். உ-ம். நும்மை,நும்மொடு என ஒட்டும். ள அஅ . தாம்நா மென்னு மகர விறுதியும் யாமெ னிறுதியு மதனோ ரன்ன் ஆ எ ஆகும் யாமெ னிறுதி ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும் ஏனை யிரண்டு நெடுமுதல் குறுகும். (கரு)