பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர் மயங்கியல் எரு உடம். உணக்கொண்டான், தினக்கொண்டான்; சென்றான், தந்தான்,போயி னான் என்பன வினையெச்சம். மேலனவெல்லாம் இடைச்சொல். புலிபோலக்கொன் றான் என்பது உவமம், கொள்ளெனக்கொண்டான் என்பது என என் எச்சம். அக்கொற்றன்; சாத்தன், தேவன், பூதன் என்பன சுட்டின் இறுதி. ஆங்கக்கொண் டான் என்பது உரையசைக்கிளவி. (2) உரு. சுட்டின் முன்னர் ஞ நமத் தோன்றின் ஒட்டிய வொற்றிடை மிகுதல் வேண்டும். இது, சுட்டு மென்கணத்தொடு முடியுமாறு கூறுதல் நுதலிற்று. இ-ள்:-சுட்டின்முன்னர் ஞ ந ம தோன்றின்-சுட்டின் முன்னர் ஞ ந மக்கள் முதலாகியமொழி வருமொழியாய்த்தோன்றின், ஒட்டிய ஒற்று இடைமிகுதல் வேண் டும் - தத்தமக்குப் பொருந்திய ஒற்று இடைக்கண்ணே மிகுதல் வேண்டும். உ-ம். அஞ்ஞாலம்; நூல், மணி எனவரும்- உளசு. யவமுன் வரினை வகர மொற்றும் (12) இது, சுட்டு இடைக்கணத்தோடு முடியுமாறு கூறுதல் நுதலிற்று. இ-ள்:-ய வ முன் வரின் வகரம் ஒற்றும்-பகர வகர முதல்மொழி சுட்டின் முன்னே வரின் இடைக்கண் வகரம் ஒற்றாம். உ-ம். அவ்யாழ், அவ்வளை எனவரும். உளஎ. உயிர்முன் வரினு மாபிய றிரியாது. (x) இஃது, அச்சுட்டு உயிர்க்கணத்தொடு முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- உயிர் முன் வரினும் அ இயல் திரியாது-உயிர்முதல்மொழி சுட்டின் முன்னர் வரினும் மேற்கூறிய வகரம் மிக்குமுடியும் அவ்வியல்பில் திரியாது. உ-ம். அவ்வடை, அவ்வாடை என ஒட்டுக. இடைமிக்க வகரத்தினை நெறியியல் என்ற இலேசினான் இரட்டுதல் கூறின மையின், அது நிலைமொழித்தொழி லென்பதுவே கூறப்பட்டது. 'திரியாது' என்ற தனானே, மேற்சுட்டு நீண்டவழி யகரத்தொடு கொள்க. உ.அ. நீட வருதல் செய்யுளூ ர்த்தே. இஃது, அச்சுட்டுச் செய்யுளுள் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (ரு) இ-ள்:- நீட வருதல் செய்யுளுள் உரித்து-அச்சுட்டு நீளும்படியாக வருதல் செய்யுளிடத்து உரித்து. உ-ம். "ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே"[கிளவியாக்கம்-க]எனவரும். வருமொழி வரையாது கூறினமையின், இம்முடிபு வன்கணமொழிந்த கண்மெல் லாவற்றொடும் சென்றது. உதாரணம் பெற்றவழிக் கண்டுகொள்க. உளகூ. சாவ வென்னுஞ் செயவெ னெச்சத் திறுதி வகரன் கெடுதலு முரித்தே. () இது, மேல் "வினையெஞ்சு கிளவியும்" [உயிர்மயங்கியல்-உ] என்ற முடிபிற்கு எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று.