பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எஅ தொல்காப்பியம் - இளம்பூரணம் "ஒன்றென முடித்தல்" [பொருள்-கூகூகூ உரை) என்பதனான், அந்நீட்சி இயல்யு கணத்துக்கொள்க. அம்மாஞெல்லா எனவரும். உககூ. பலவற் றிறுதி நீடுமொழி யுளவே செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான. இது, மேற் "பலவற்றிறுதிப்பெயர்க்கொடை" ஓதியதற்குச் செய்யுள்முடிபு கூறுதல் நுதலிற்று. (0) (உயிர்மயங்கியல்-அ] என்று இள்:- பலவற்று இறுதி நீடும் மொழி உள-பல என்னும் சொல்லின் இறுதி அகரம் நீண்டு முடியும் மொழிகளும் உள. (யாண்டு உளவெனில்) செய்யுள் கண்ணிய தொடர்மொழியான் செய்யுளாதயேக் கருதி ஒன்றோடொன்து தொடர்ச்சிப்படிச் செய்யுள்முடிபுடைய மொழிகளின் கண்ணே. செய்யுள் கண்ணியமொழி' என்னாது 'தொடர்மொழி' என்றதனான், இப்பல வென்பது நீளும்வழி வருமொழியாவது சிலவென்பதே என்று கொள்ளப்படும். 'செய்யுளான' என்னாது 'செய்யுள்கண்ணிய தொடர்மொழியான' என்றதனால், பல என்னும் மொழியீறு நீண்டவழி நிலைமொழி அரரப்பேறும் வருமொழி ஞகாரமெல் லெழுத்துப்பேறும், வருமொழியீறு நீண்டவழி அகரப்பேறும் மகரமாகியமெல்லெ ழுத்துப்பேறும் கொள்க. 'உண்டு' என்னாது 'உள' என்றதனால், சிலவென்னும் வருமொழியிறுதி நீடலும் கொள்க. உ-ம். "பலாஅஞ் சிலாஅ மென்மனார் புலவர்" எனவரும். இதன்சொல்நிலை பலசில என்னும் செவ்வெண். [அகரம் சாரியை] (கக) உக ச. தொடர லிறுதி தம்முற் றாம்வரின் லகரம் றகரவொற் றாதலு முரித்தே. இது, பல சில என்பவற்றிற்கு இயல்பேயன்றித் திரிபும் உண்டென எய்திய தன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. இ-ள்:-தொடால் இறுதி தம்முன் தாம்வரின்- தொடர்மொழியல்லாத ஈரே ழுத்தொருமொழியாகிய பல சில என்னும் அகரவீற்றுச்சொல் தம்முன்னே தாம் வரின், லகரம் றகர ஒற்று ஆதலும் உரித்து -தம் ஈற்றில்நின்ற லகரவொற்று றகர வொற்றாய்த்திரிந்து முடிதலும் உரித்து. உ-ம். பற்பலகொண்டான் எனவும். சிற்சிலவித்தி எனவும் வரும். 'தன்முற்றான்' என ஒருமையாற்கூறாது 'தம்முற்றாம்வரின்' என்றபன்மையான், மேல் பல சில என நின்ற இரண்டும் தழுவப்பட்டன. ‘தொடாலிறுதி தம்முன்வ ரின்' என்னாது 'தாம்' என்றதனான், இம்முடிபின்கண் பலவென்பதன்முன் பலவருக, சிலவென்பதன்முன் சிலவருக என்பது கொள்ளப்பட்டது. 'லகரம் றகரமாம்' என்னாது 'லகரம் றகரவொற்றாம்' என்ற ஞாபகத்தான், அகரம் கெடுமென்றானாகக் கொள்க. அருத்தாபத்திமுகத்தால், தம்முற்றாம்வரின் லகரம் றகரவொற்றாமெனவே, தம்முன் பிற வந்தவிடத்து லகரம் றகரவொற்றா காது அகரம் கெடுமென்பது கொள்ளப்படும். பல்படை, பல்யானை, சில்படை,சில் கேள்வி என வரும்.