பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் எகூ 'தொடரலிறுதி' என்பது சுட்டல்லது ஒரெழுத்தொருமொழி அகரமின்மை யின், ஓரெழுத்தொருமொழிமேற் செல்லாதாயிற்று. உரித்தென்றது, அகரவீற்றொ ருமைபற்றி.(ஏகாரம் ஈற்றசை.) உகதி. வல்லெழுத் தியற்கை ஏதழத் தோன்றும், (562) இதுவும், மேற்கூறிய இரண்டிற்கும் இன்னும் ஒர் முடிபு வேற்றுமை உணர்த்து தல் நுதலிற்று. இ-ள்:- வல் எழுத்து இயற்கை உறழ தோன்றும்- மேற்கூறிய பலசில என் னும் இரண்டிற்கும் அகரவீற்றுப் பொதுவிதியிற் கூறிய வல்லெழுத்து மிகுதியது இயல்பு மிகலும் மிகாமையுமாகி உறழ்ந்துவரத்தோன்றும். உ-ம். பலப்பல, சிலச்சில; பலபல, சிலசில எனவரும். ஈண்டும் தம்முற்றாம் வருதல் கொள்க. 'இயற்கை' என்றதனான், முன்கூறிய பற் பல, சிற்சில என்னும் முடிபொடு பல்பல, சில்சில என்னும் முடிபுபெற்று உறழ்ச்சி யாதல் கொள்க. 'தோன்றும்' என்றதனான், அகரம் கெட லகரம் ஆய்தமும் மெல்லெழுத்துமாய்த் திரிந்து முடிதல் கொள்க. உ-ம். பஃறானை, பன்மரம்; சிஃறாழிசை, சின்னூல் எனவரும். உக க. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. (4/5) இஃது, அகரவீற்றுப்பெயர்க்கு வன்கணத்தொடு வேற்றுமை முடிபு கூறுதல் அதலித்து இ-ள்:- வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று-அகாவீற்றுப்பெயர் வேற் னுமைப் பொருட்புணர்ச்சிக் கண்ணும் மேற்கூறிய அல்வழியோடு ஒருதன்மைத் தாய் க ச த ப முதல்மொழி வந்தவழி தத்தம் ஒற்று இடைமிக்குமுடியும். உ-ம். இருவிளக்கொற்றன், சாத்தன், தேவன், பூதன் எனவரும். விளக்கு றுமை எனக் குணவேற்றுமைக்கண்ணும் கொள்க. [இருவிள-ஒலை; வேணாட்டகத்து ஓர் ஊர [ உகஎ. மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே. (கச) இஃது, அகரவீற்று மரப்பெயர்க் கிளவிக்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. இ-ள்:- மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகும்-அகரவீற்று மரப்பெயராகிய சொல் மெல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம். விளங்கோடு, விளஞ்செதிள்; தோல், பூ எனவரும். உகஅ. மகப்பெயர்க் கிளவிக் கின்னே சாரியை. (கரு) இஃது, அவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. இ-ள்:- மரப்பெயர்க் கிளவிக்கு இன்சாரியை-அகரவீற்று மக என்னும் பெய ர்ச்சொல்லிற்கு வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண் வரும் சாரியை இன். உ-ம். மகவின்கை, செவி, தலை, புறம் எனவரும்.