பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரு தொல்காப்பியம் - இளம்பூரணம் சாரியைப்பேறு வரையாது கூறியவழி நான்குகணத்துக் கண்ணும் செல்லு மென்பதாகலின், மகவின்ஞாண் என இயல்புகணத்துக்கண்ணும் கொள்க. உககூ. அத்தவண் வரினும் வரைநிலை யின்றே. இதுவும் அது. (ககூ) இ-ள்:- அத்து அவண் வரினும் வரை நிலை இன்று-மேற்கூறிய இன்னேயன்றி அத்து என்னும் சாரியை இயைபுவல்வெழுத்தினோடு அம் மக என்னும் சொல்விட த்து வந்து முடியினும் நீக்கும் நிலைமை இன்று. உ-ம். அத்து அவண் வரினும் வரை நிலை இன்று-மேற்கூறிய இன்னேயன்றி அத்து என்னும் சாரியை இயைபுவல்லெழுத்தினோடு அம் மக என்னும் சொல்லிட த்து வந்து முடியினும் நீக்கும் நிலைமை இன்று. உ-ம். மகத்துக்கை; செவி, தலை, புறம் எனச்செய்கை அறிந்துமுடிக்க. 'அவண்' என்றதனால், மகப்பால்யாடு என வல்லெலுத்துப்பேறும். மகவின்சை என மேல் இன்சாரியைபெற்றவழி இயைபுவல்லெழுத்து வீழ்வும், உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் வந்தவழி விளவின்கோடு என இயைபுவல்லெழுத்து வீழ்வும் கொள்க. 'நிலை' என்றதனால், மகம்பால்யாடு என மெல்லெழுத்துப் பேறும் கொள்க. உஉ. பலவற் றிறுதி யுருபிய னிலையும். (கஎ) இஃது, அகரவீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. இ-ள்:- பலவற்று இறுதி உருபுஇயல் நிலையும்-பல என்னும் அகரவீற்றுச் சொல் உருபுபுணர்ச்சிக்கண் வற்றுப்பெற்றுப் புணர்ந்த இயல்பின்கண்ணே நிற்கும். உ-ம். பலவற்றுக்கோடு, செவி, தலை, புறம் எனவரும். உஉக. ஆகார விறுதி யகர வியற்றே. (கஅ) இஃது, ஆகாரவீற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு உணர்த்துதல் நுத விற்று. இ-ள்:- ஆகார இறுதி அகா இயற்று - ஆகார வீற்றுப்பெயர் (அல்வழிக்கண்) அகரவீற்று அல்வழியது இயல்பிற்றாய் வல்லெழுத்துப் பெற்றுமுடியும். உ-ம். தாராக்கடிது; சிறிது, தீது பெரிது எனவரும். உஉஉ. செய்யா வென்னும் வினையெஞ்சு கிளவியும் அவ்விய றிரியா தென்மனார் புலவர். இஃது, அவ்வீற்று வினைச்சொல் முடிபு கூறுதல் நுதலிற்று. (ககூ) இ-ள்:- செய்ய என்னும் வினை எஞ்சு கிளவியும்-(பெயரேயன்றி) செய்யா என்று சொல்லப்படும் ஆகாரவீற்று வினையெச்சச்சொல்லும், அ இயல் திரியாது என்மனார் புலவர் - வல்லெழுத்து மிக்குமுடியும் அவ்வியல்பில் திரியாதென்று சொல்லுவர் புலவர். உ-ம். உண்ணாக்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எனவரும். 'திரியாது' என்றதனால், 'செய்யா' என்னும் பெயரெச்சமும் அவ்வாறு முடியு மெனக்கொள்க. உண்ணாக்கொற்றன் எனவரும். (2.w)