பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அஉ தொல்காப்பியம் - இளம்பூரணம் உஉரு. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. இஃது, அவ்வீற்று வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:- வேற்றுமைக்கண்ணும் அதன் ஒர் அற்று -(ஆகாரவீற்றுப்பெயர் அல் வழிக்கண்ணேயன்றி) வேற்றுமைக்கண்ணும் அகரவீற்று அல்வழியோடு ஒருதன் மைத்தாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்குமுடியும். உ-ம். தாராக்கால், சிறகு,தலை, புறம் எனவரும். உஉக. குறியதன் முன்னரு மோரெழுத்து மொழிக்கும் அறியத் தோன்று மகரக் கிளவி. (உங) இஃது, அவ்வீற்றிற் சிலவற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுத லிற்று. அகரக்கிளவி இ-ள்: குறியதன்முன்னரும் ஓர் எழுத்து மொழிக்கும்- குற்றெழுத்தின்முன் கின்ற ஆகாரவீற்றிற்கும் ஓரெழுத்தொருமொழி ஆகார வீற்றிற்கும், அறிய தோன்றும்-(நிலைமொழிக்கண்) அகரமாகிய எழுத்து அறியத்தோன்றும். உ-ம். பலாஅக்கோடு, செதிள், தோல், பூ எனவும்; அக்குறை, செய்கை, தலை, புறம் எனவும் வரும். ஒரெழுத்தொருமொழி முற்கூறாதவதனால், அதன்கண் அகரப்போறு சிறுபான் மையெனக் கொள்க. 'அறிய' என்றதனால் அவ்விருவழியும் அகம் பொருந்திய வழியே வருதலும், அவ்வீற்றுவேற்றுமையுள் எடுத்தோதாதவற்றின்முடிபும், இவ்வீற் றுள் உருபிற்குச் சென்றசாரியை பொருட்கண் சென்றவழி இயைபுவல்லெழுத்து வீழ்வும், இவ்வுயிரீற்றில் வரும் உருபீற்றுச்செய்கையும்கொள்க. உ-ம். அண்ணாஅத்துக்குளம், உவாஅத்துஞான்றுகொண்டான், உவா அத்தாற் கொண்டான், யாவற்றுக்கோடு என இவை பிறமுடிபு. மூங்காவின்றோல் என்பது இயைபுவல்லெழுத்து வீழ்வு. இடாவினுட்கொண்டான் என்பது உருவீற்றுச் செய்கை. (உ) உஉ.எ. இராவென் கிளவிக் ககர மில்லை. இஃது, அவ்வகரப்பேற்றிற்கு ஒருவழி எய்தியது விலக்குதல் நுதலிற்று. இ-ள்:- இரா என் கிளவிக்கு அகரம் இல்லை-இரா என்னும் ஆகாரவீற்றுச் சொல்லிற்கு முன்கூறிய அகரப்பேறு இல்லை. உ-ம். இராக்கொண்டான் எனவரும். உஉ அ. நிலாவென் கிளவி யத்தொடு சிவணும். (உரு) இஃது, அவ்வீற்றுள் ஒருமொழிவழி அகரம் விலக்கி அத்துவடித்தல் நுதலிற்று. இ-ள் :- நிலா என் கிளவி அத்தொடு சிவணும்-நிலா என்னும் சொல் அத்துச் சாரியையொடு பொருந்திமுடியும். உ-ம். நிலாத்துக்கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவரும். நிலைமொழித்தொழில் வருமொழித்தொழிலை விளக்குமாகலின், அத்து வகுப்ப அகரம் வீழ்ந்தது. ()