பக்கம்:Humorous Essays.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

ஹாஸ்ய வியாசங்கள்

அறிவித்தார். அதன் பேரில் இந்துஸ்தானி பாஷை தெரிந்த அவர் “அம்கு மாலும் நை சாயபு” என்று ஒருவருக்கும் பெயரில்லை; அதற்குப் பொருள் என்னவென்றால் “எனக்குத் தெரியாது ஐயா” என்பதாம் என்று அறிவித்தார். அவர் பிறகு வீட்டின் இரண்டாங் கட்டிற்குப் போனவுடன் சபாபதி, முதலியாரைப் பார்த்து,“என்னாப்பா அது! நீயும் கொஞ்சம் இந்துஸ்தானி பாஷை தெரிந்திருந்தால், எனககு பூசை விழுந்திருக்காதே; இன்னைக்கி!” என்றான்.

தீண்டாமை

தீண்டாமையைப் பற்றி மிகவும் கடுமையான விரதம் பூண்ட சுந்தர ஐயர் எனும் ஒரு பிராம்மணர் சிந்தாதிரிப்பேட்டையில் வசித்து வந்தார். அவர் ஒரு புத்தக வியாபாரி; யாராவது சூத்திரர்கள் தன்னிடம் புத்தகங்கள் வாங்க வேண்டி வந்தால், அவர்கள் வேண்டிய புத்தகங்களை அவர்களிடம் கொடுத்து, அவர்கள் அவற்றின் பொருட்டு பணம் கொடுத்தால், அப்பணத்தை கையில் வாங்காமல், தன் எதிரில் வைக்கச் சொல்லி, இதற்கென்று தன் பக்கத்தில் எப்பொழுதும் சித்தமாய் வைத்திருந்த பஞ்ச பாத்திரத்தினின்றும் உத்தரிணியில் ஜலத்தையெடுத்து அப்பணத்தின் மீது புரோட்சணம செய்து விட்டு, பிறகுதான் அப்பணததைத தீண்டி எடுத்து தன் பைக்குள் சேர்த்துக் கொள்வார். இவ்வழக்கம் நெடுநாளாக நடந்து வந்தது. இதையறிந்த நமது சபாபதி முதலியார், தான் அவரிடமிருந்து ஏதோ ஒரு புஸ்தகம் விலைக்கு வாங்க சமயம் நேரிட்ட பொழுது, கையில் பணத்துடன் ஒரு வெள்ளி பாத்திரத்தில் குழாய் ஜலம் பிடித்துக் கொண்டு சென்றார். சுந்தர ஐயர் வீடு சென்றதும், அவரைக் கண்டு தான் வேண்டிய புஸ்தகத்தின் பெயரைச் சொல்லி அதற்குரிய விலையை அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/32&oldid=1352445" இலிருந்து மீள்விக்கப்பட்டது