12 நாடகமேடை நினைவுகள் முதலியார். சம்பத்து. செட்டியார் என்பவருக்கும் ஏறக்கு றைய என் வயதுதான் இருக்கும். பி. சி. சுப்பிரமணியப் பிள்ளை என்பவர் பி. ஏ. பட்டம் பெற்றிருந்தார். அவருக்கு என்னே விட சுமார் நான்கு ஐந்து வயது அதிகமாயிருக்கும். இங்ங்னம் சுகுண விலாச சபையை ஸ்தாபித்தவர்கள் எழுவரும் சிறு வயதுடையவர்களாயிருந்தோம். அ ன் றி யு ம் எங்களுக்குள் சிலருடைய தகப்பன் மார்கள் உயர் பதவியிலிருந்து சம்பாத்ய முடையவர்களா யிருந்தபோதிலும், காங்களாகப் பெரும்பாலும் சுயார்ஜிதமுடையவர்களாயில்லை. எங்களுக்குக் கையில் பணம் இல்லாவிடடாலும், மேற்கொண்ட கருமத்தை முடிக்கவேண்டு மென்னும் கருத்தில் பெரும் உற்சாகம் மாத்திரம் எங்கள் மன தில் குடிகொண்டிருந்தது என்று நான் உறுதியாய்க் கூறவேண் ம்ெ. இந்த உற்சாகமே அன்று முதல் இன்றவரை நாற்பது வருஷங்களாக அச் சபையை என்ன இடையூறுகள் இடையில் வந்த போதிலும், அவற்றை யெல்லாம் பாாாது, ஈசன் கருணை யினுல் தளரா ஊக்கத்துடன், கடத்திவரும்படிச் செய்ததெனக் கூறல்வேண்டும். இது தான் சுகுண விலாச சபை பிறந்த கதை யும் நாமகரணம் செயயப்பட்ட கதையுமாம்; இனி அதுவளர்க் தோங்கிய சதைகளே பின்வரும் அத்யாயங்களில் இறைவன் திருவருளே முன்னிட்டு எழுதுகிறேன். + +3. مسیره - மூனரும அத.தயாயம. - مس -مسمیه : سعاحتیسم சுகுண விலாச சபையை மேற் சொன்னபடி 1891 u) ஜூலை மாதம் முதல் தேதி ஸ்தாபித்தவுடன் நாங்கள் காலத்தை விணுகக்கழிக்க வில்லை. உடனே ஒரு வாரத்திற் கெல்லாம் கிர்வாக சபைக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. அதில் சபைக்கு அங்கத்தினரைச் சேர்ப்பதற்காக ஒரு பிரசுரம் அச் சிட்டு வெளியிடவேண்டுமென்ற தீர்மானிக்கப்பட்டது. அத் தீர் மானத்தின் படி ஒரு விளம்பரத்தை ஆங்கிலேய பாஷையில் நான் எழுதினேன். அதுதான் நான் எழுதிய வற்றுள் முதல் முதல் அச்சிடப்பட்ட விஷயமாகும். அச்சிடப்பட்டு வெளிவந்த அந்த விளம்பரத்தை நான் பார்த்தபொழுது எனக்கு ஒருவித மகிழ்ச்சி யுண்டாயது. அதில் சுகுண விலாச சபை சென்னை யில் எற்படுத்தப்பட்ட காரணமும், அக்காலத்தில் நமது தேசத் தில் நடத்தப்பட்ட நாடகங்களிலுள்ள குறைகளும், அக் குறை களைத் தீர்க்க மேற்படி சபையார் மேற்கொண்ட மார்க்கங்களும், தெரிவிக்கப் பட்டிருக்தன. சாதாரணமாக அச் சபையைச்