பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 19 அன்றிரவு நான் வீட்டிற்குப் போனவுடன் மேற்குறித்த ஆபாசங்களை யெல்லாம் எப்படித்தவிர்ப்பது என்று யோசித் தேன் மறு நாள் நிர்வாக சபையின் அங்கத்தினராகிய எனது கண்டர்களைச் சாயங்காலம் சந்தித்தேன். அவர்களுடன் எனது கியாயங்களையெல்லாம் எடுத்துக்கூறி, பின்பாட்டை விட்டுவிட வேண்டுமென்று அவர்களும் ஒப்புக் கொள்ளும்படிச் செய் தேன். பின்பாட்டென்பது பழய காலத்து வழக்கமாயினும் தற்காலத்திய நாகரீகத்திற்கு அது பொருந்தியதல்ல வென்று அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். ஆயினும் நாடகமாடும் பொ ழுது பக்க வாத்தியத்துடன், தாளமும் இருக்க வேண்டியது அதி அவசியம் என்று அவர்கள் கூறினர்கள். அதன் மீது அவர் கள் அறியாதபடி இதற்கு ஒரு யுக்தி செய்ய வேண்டுமென்று தீர்மானித்தேன். ஒன்றிரண்டு ஒத்திகைகள் பொறுத்துக் கொண் டிருக்தேன். பிறகு ஒரு நாள் ஒத்திகை முடிக்கதும் எல்லோரும் வீட்டிற்குப் போன பிறகு மெல்ல, அங்கு வைத்திருந்த இாண்டு ஜதை தாளங்களையும் வீட்டிற்குத் திருடிக்கொண்டுபோய் விட் டேன்! எனது சபலாபத்தை நாடவில்லை என்பது தான் இதற் குச் சாக்காகும். இல்லாவிட்டால் இது என்னே இந்தியன் பீனல்கோட் (Indian Penal code) குற்றத்திற்கு உட்படுத்தியி ருக்க வேண்டும் மறு ஒத்திகைக்கு வழக்கத்தைப் போல் சென்று மற்றவர்களுடன் உட்கார்ந்திருந்தேன். சங்கீதம் ஆரம்பிப்பதற் காகப் ப்க்கவாத்தியங்கள் சித்தமானவுடன், தாளங்களைக் காணுேம் என்று எல்லோரும் தேட ஆரம்பித்தார்கள். கோழித் திருடி கூடக்குலாவினுள் என்பது போல, நானும் அவர்களு டன் தேடினேன் ! என் விட்டில் ஒளித் து வைத்திருந்த தாளங் கள் அங்கே எப்படி அகப்படும் கொஞ்ச நோம் தேடி அகப் படாமற்போகவே, இனி என்ன செய்வது, பிறகு பார்த்துக் கொள்வோம், இப்பொழுது ஒத்திகை தாளங்கள் இல்லாமல் ஆரம்பிப்போம், என்று கூறினேன். வேறுவழியில்லாமல் அதற்குடன் பட்டு, நாடக பாத்திரங்களெல்லாம் ஒத்திகை ஆாம் பித்தார்கள். அன்று ஒத்திகை முடிந்தவுடன் ஒவ்வொரு அங் கத்தினருடலும் மெல்லபேசி, தாளம் இல்லாவிட்டால் தவறு ஒன்றுமில்லை யென்றும், தாளத்துடன் பாடுவதைவிட தாளம் போடாமலே பாடுவது அழகாயிருக்கிறதென்றும், தாளத்தைத் தட்டிக்கொண்டு பாடுவது தற்கால நாகரீக நாடகங்களுக்குப் பொருத்தமாக இ ல் லே யெ ன் று ம், ரூபித்துக்காட்டினேன். வரதராஜுலு நாயகர் தவிர மற்றவர்களெல்லாம் மெல்லமெல்ல என் வழிக்குவந்தனர். அவர் மாத்திசம் எனக்கு ஞாபகமிருக் கிறபடி கடைசிவரையில் எனது எண்ணம் சரியானதென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/24&oldid=727432" இலிருந்து மீள்விக்கப்பட்டது