44 நாடகமேடை நினைவுகள் அற்றிலொரு பங்குகூடப் பெற்றிலேன் எந்த அனுபவமும் முதல் முதல் கிடைப்பதற்குச் சமான மாகாது-சந்தோஷத்தி அம் சரி, துக்கத்திலும் சரி. அன்றைத்தினம் ஒத்திகையின் நாடக பற்றி எனது நண்பர்கள் கொஞ்சம் அறிய - என்று கினேக்கிறேன். முக்கியமான கதா நாயகன் வ்ே. டது, ரங்கசாமி ஐயங்கார். இவர் என்னே விடச் சிறு வயதுடை யவர். சாரீரம் மிகவும் சுத்தமானது. இவருடைய பாட்டைப் போன்றது ஆண்மக்களுள் பிற்காலம் ஒன்றிாண்டு பெயரிடம் தான் கேட்டிருக்கிறேன். நடிப்பதில், முதலில் சங்கோசம் அதிமாக உடையவராயினும், தாள டவில் மிகவும் தேர்ச்சி பெற். ருர், அக்காலத்தில் முக்கியமாக நாடகங்களில் கானத்துக்கே அதிக உன்னத பதவி கொடுத்திருந்ததால், இவருக்கு கதா காய கன் வேஷம் கொடுக்கப்பட்டது. ஆயினும் இவர் ஒத்திகை நடத் துங்கால் ஒரு விஷயத்தில் மிகவும் கஷ்டப்பட்டார். கதா நாயக னை இவர் கதா நாயகி வேடம் பூண்ட ஜெயராம் நாயகரை முத தமிடவேண்டிய சந்தர்ப்பம் வந்தது. அந்தப் பாகம் ஒத்தி கை கடத்தும் பொழுதெல்லாம், முகத்தைச் சுளித்துக் கொண்டு மிகவும் சங்கோசப் படுவார், உடம்பெல்லாம் நடுங்கிப்போய்! சரி யாக எப்படி முத்தமிடுவது என்பதை நான் அவருக்குப்பன் முறை கற்பிக்க வேண்டியிருந்தது . இவ்விஷயமாகப் பன்முறை. அவரை நாங்கள் எல்லாம் ஏளனம் செய்வோம். இன்னுெரு விஷ யம் இவரைப் பற்றி எனது நண்பர்கள் அறிய வேண்டும். இவர் தகப்பனுர் வயதான லெளகீகப் பிராம்மணர், நாடக மாடுவ தென்முல் அவருக்கு கொஞ்சமேலும் பிடிக்காது; ஆகவே இரண்டு மூன்று வருடங்கள் வரையில் ரங்கசாமி ஐயங்கார் நாடக மாடுவதை அவர் தங்தையறியாதபடி மறைத்து வைக்க வேண்டியிருத்தக ஏழு எட்டு மணிக்கெல்லாம் அவர் தங்தை சாப்பிட்டுப் படுத்துக்கொண்ட பின், தனது தாயாருடைய அனு மதி பெற்றுத் தெருக் கதவை மெல்லத்திறந்துகொண்டு, நாடக மாட வந்த விடுவார். நாடகம் முடிந்தவுடன் விட்டிற்குத் திரும்பிப் போகும் பொழுதும் தன் தாயாரிடம் முன்பே சொல்லி வைத்து, மெல்ல தெருக் கதவைத் தட்டி அவர்களைக் திறக்கச் செய்து தந்தை அறியாதபடி வீட்டிற்குள் தழைத்து சந்தடி செய்யாமல் தன் அறைக்குப் போய் படுத்துக் கொள்வார். அக் காலத்தில் நாடக மாடுவதென்ருல் அவ்வளவு கிக்ருஷ்டமாக எண்ணப் பட்டது. இப்பொழுதும் அம்மாதிரியான எண்ணம் இந்நாட்டை விட்டு முற்றிலும் அகல வில்லை யென்றே நான் எண் ஆணுகிறேன். -